Tuesday, September 18, 2018

பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால்.

1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில்  சாப்பிட்டு வந்தால் . . .

1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
நம் வீட்டு சமையலறையில் அன்றாடம் நம் வீட்டு பெண்கள் உணவு சமை க்கும்போது இதன் ருசிக்காக
பூண்டினைசேர்த்து சமைப்பார்கள். இது ருசிக்காக மட்டு மல்ல‍ ஆரோக்கியத்திற்காகவும் தான். இதே பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன‍ மாதிரியாக மருத்துவ பலன்களை நாம் பெறலாம் என்பதை இங்கே காண்போம்.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங் கள், உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கி ன்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப் பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கி யத்திற்கு நல்லது.
ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பி ட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக (antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள் ளது.
பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரி யாகசெயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.
பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்க ள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழு த்தம் அதிகரிப்பது குறைந்து, இதயநோய் வருவது தடுக்கப்ப டும்.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனைவெளியேற்ற தினமு ம் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப் பிட்டு வந்தால், உடலில்உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளி யேறி, புழுக்களும் வெளியேறிவிடும் .ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது..
பூண்டை பச்சையாக சாப்பிடுவ தால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அது வும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலி ன் வெப்பநிலை அதிகரிப்பது, தலைவலி ஏற் படுவது போன்றவை இருந்தால், உடனே பூண் டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங் கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...