.* ஒற்றை ஊதியத்தில்
ஒன்பது பிள்ளைகள்
ஒற்றுமையாய் வாழ்ந்தது
அந்தக் காலம்!
–
ஒற்றைப் பிள்ளைக்கு
இருவர் ஊதியம்
பற்றாக்குறையானது
இந்தக் காலம்!
–
வாசல், நடை, கூடம், முற்றம்
வாழும் வீட்டின் அடையாளம்
நேசமுடன் கூடி மகிழ்ந்தது
அந்தக் காலம்!
–
ஒன்று, இரண்டு, மூன்று என
படுக்கையறையே குறியீடாய்
அடிமைப்படுத்திடும் அந்நிய பண்பாடு
இந்தக் காலம்!
–
பாய் விரித்துப் படுத்து
களைப்புடன்
வாய் திறந்து துாங்கியது
அந்தக் காலம்!
–
வராத துாக்கத்தை வரவழைக்க
மருந்து, மாத்திரை தேடுவது
இந்தக்காலம்!
–
ஒழுக்கமுடன் பண்பும் கலந்து
எழுத்தறிவித்த கோவில்களாய்
பழுதில்லா கல்விச் சாலைகள் இருந்தது
அந்தக் காலம்!
–
கற்றை கற்றையாய் வசூலித்து
எழுத்தையும், அறிவையும் விற்கும்
கேவலமான கல்விச் சந்தைகள்
இந்தக் காலம்!
–
காசு, பணம் வேண்டி
மாசிலா மனதுடன், பக்தர்கள்
ஆலயத்தில் ஈசனைத் தொழுதது
அந்தக் காலம்!
–
காசு, பணம் இருந்தால் தான்
கடவுளே தரிசனம் தருவார்
ஆண்டவனும் விலை போன அதிசயம்
இந்தக் காலம்!
–
கர்ம வீரராய், கறை படாத
கைகளுடன், நேர்மையாய் வாழ்ந்த
ஆட்சியாளர்…
தர்ம நெறியுடன்
இருந்த அரசியல்வாதிகள்
அந்தக் காலம்!
–
மக்கள் நலனை சற்றும் சிந்தியாமல்
எக்கணமும் தன்னலமே குறிக்கோளாய்
வக்கணையாய் வாய் பேசும் தலைவர்கள்
இந்தக் காலம்!
🙏 படித்ததில் பிடித்தது.
ஒன்பது பிள்ளைகள்
ஒற்றுமையாய் வாழ்ந்தது
அந்தக் காலம்!
–
ஒற்றைப் பிள்ளைக்கு
இருவர் ஊதியம்
பற்றாக்குறையானது
இந்தக் காலம்!
–
வாசல், நடை, கூடம், முற்றம்
வாழும் வீட்டின் அடையாளம்
நேசமுடன் கூடி மகிழ்ந்தது
அந்தக் காலம்!
–
ஒன்று, இரண்டு, மூன்று என
படுக்கையறையே குறியீடாய்
அடிமைப்படுத்திடும் அந்நிய பண்பாடு
இந்தக் காலம்!
–
பாய் விரித்துப் படுத்து
களைப்புடன்
வாய் திறந்து துாங்கியது
அந்தக் காலம்!
–
வராத துாக்கத்தை வரவழைக்க
மருந்து, மாத்திரை தேடுவது
இந்தக்காலம்!
–
ஒழுக்கமுடன் பண்பும் கலந்து
எழுத்தறிவித்த கோவில்களாய்
பழுதில்லா கல்விச் சாலைகள் இருந்தது
அந்தக் காலம்!
–
கற்றை கற்றையாய் வசூலித்து
எழுத்தையும், அறிவையும் விற்கும்
கேவலமான கல்விச் சந்தைகள்
இந்தக் காலம்!
–
காசு, பணம் வேண்டி
மாசிலா மனதுடன், பக்தர்கள்
ஆலயத்தில் ஈசனைத் தொழுதது
அந்தக் காலம்!
–
காசு, பணம் இருந்தால் தான்
கடவுளே தரிசனம் தருவார்
ஆண்டவனும் விலை போன அதிசயம்
இந்தக் காலம்!
–
கர்ம வீரராய், கறை படாத
கைகளுடன், நேர்மையாய் வாழ்ந்த
ஆட்சியாளர்…
தர்ம நெறியுடன்
இருந்த அரசியல்வாதிகள்
அந்தக் காலம்!
–
மக்கள் நலனை சற்றும் சிந்தியாமல்
எக்கணமும் தன்னலமே குறிக்கோளாய்
வக்கணையாய் வாய் பேசும் தலைவர்கள்
இந்தக் காலம்!
🙏 படித்ததில் பிடித்தது.
No comments:
Post a Comment