காஷ்மீர் விவகாரத்தில் காங்.,ன் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து தனது கொறடா பதவியை ராஜினாமா செய்வதாக புவனேஸ்வர் கலிட்டா தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான நிலைப்பாட்டை காங்., எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜினாமா கடிதத்தையும் ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடுவிடம் அவர் அளித்தார்.

இதே காரணத்திற்காக சமாஜ்வாதி எம்.பி.,யான சஞ்சய் சேத்தும் ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். இவர்கள் இருவரின் ராஜினாமாவையும் ஏற்பதாக வெங்ககைய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment