தமிழகத்தில் நேற்று வரை 969 பேருக்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். 10 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஏப்.,11) இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

No comments:
Post a Comment