Sunday, April 12, 2020

எதையும் பிரியமாய் , கவனமாய் , அக்கறையாய்,பொறுப்பாய் செய்வாய்.

மிகவும் வசதி படைத்த *ஒரு படகின்* உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி *ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்தார்!*

அப்பணியை கண்ணும் கருத்துமாய் , கவனத்துடன் செய்து வரும்போது *அப்படகின் அடியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதைக் கண்ட பெயிண்ட்டர் மிகவும் நேர்த்தியாக அந்த ஓட்டையை அடைத்து சீர் செய்து , பெயிண்ட் வேலையையும் முடித்து, அதன் உரிமையாளரிடம் காண்ட்ராக்ட் பேசியபடி தன் தொகையை வாங்கிக்கொண்டு ,* மிக அழகாக பெயிண்ட் செய்துள்ளதற்காக பாராட்டையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் !
.
மறுநாள் , அந்தப்படகின் உரிமையாளர் பெயிண்டரை தேடி *அவரிடத்திற்கு ஒரு பெரிய தொகை மற்றும் பரிசுடன் வந்தார்.*
.
“நேற்றே எனக்கு *சேர வேண்டியதை தந்து விட்டீர்களே ஐயா”* என்றார் பணிவாய்!
.
அதற்கு அவர் *”இது நீங்கள் செய்த பெயிண்ட்டிங்காக அல்ல ! நீங்கள் அடைத்த படகின் ஓட்டைக்காக !”*
.
” அது ஒரு சிறிய வேலை !அதற்குப்போய் ஏன் இதெல்லாம் ” என்றார் பெயிண்ட்டர் !
.
அதற்கு அந்த படகின் உரிமையாளர் சொன்னார்.
*”நண்பரே ! உங்களுக்குத் தெரியாது என்ன நடந்தது என்று !*
*நான் உங்களை பெயிண்ட் செய்ய சொன்னபோது அதிலிருந்த ஓட்டையை முற்றிலும் மறந்திருந்தேன் !*
பெயிண்ட் காய்ந்தபின் என் *குழந்தைகள் அந்த படகை எடுத்துக்கொண்டு விளையாட்டாய் மீன் பிடிக்க போய்விட்டனர் !*
.
அவர்களுக்கும் படகில் ஓட்டை இருந்தது தெரியாது !
அவர்கள் படகை எடுக்கும் போது நானும் வீட்டில் இல்லை !
.
வீட்டிற்கு திரும்பி வந்தபோது படகை எடுத்துக்கொண்டு குழந்தைகள் மீன்பிடித்து விளையாட போய் உள்ளதாக கேள்விப்பட்ட போதுதான் *படகில் இருந்த ஓட்டை ஞாபகம் வந்தது !*
.
மிகவும் பதறிப்போய் அவர்களைத் தேடி ஓடினேன் , *என்ன ஆயிற்றோ என்று !*
அவர்கள் மகிழ்ச்சியாய் குதூகலத்துடன் திரும்பி வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் நெகிழ்ந்துபோனேன் !
.
*ஓடிப்போய் அந்த ஓட்டையை தேடினேன் !*
வெகு கவனமாய் , அக்கறையோடு சரிசெய்யப்பட்டிருந்த்தை கண்டவுடன் மிகவும் ஆச்சர்யமான உங்கள் செயலை பாராட்ட ஓடி வந்தேன்.
.
*_இந்த சிறிய செயல்தான் மகத்தாய் சில உயிர்களை காப்பாற்றியுள்ளது”_* என்றார் !
.
நாமும் நம் வாழ்வில் கடமையே என காரியமாற்றாமல் , எதையும் பிரியமாய் , கவனமாய் , அக்கறையாய்,பொறுப்பாய் செய்வோம் !
.
*நாம் அடைக்கும் ஓட்டைகள் எத்தனை பிரயோஜனமானது என்பது நமக்குத் தெரியாது !*
.
ஆனால் இறைவன் நம் நற் செய்கைகளுக்காய் மிக அற்புதமான பரிசுகளோடு காத்திருக்கிறார் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...