Tuesday, April 14, 2020

நல்ல மழை தானிய விளைச்சல் சார்வரி பலன் சொல்கிறது.

சார்வரி ஆண்டில் நல்ல மழை பொழியும் தானிய உற்பத்தி அதிகரிக்கும் என பஞ்சாங்க பலன் வாசிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு அன்று பஞ்சாங்க பலன்கள் வாசிக்கப்படுவது வழக்கம். 2019 ஏப்ரலில் விகாரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட போது 2020ல் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என கூறப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் கொரோனா பாதிப்பு உலகையை உலுக்கி வருகிறது.

நேற்று சார்வரி ஆண்டு பஞ்சாங்க பலன்கள் வாசிக்கப்பட்டன.அதில் கால்நடை வளர்ச்சி அதிக மழை பொழியும் விளைச்சல் அதிகரிக்கும். அரசர்கள் வித்வான்களுக்கு சிரமம் ஏற்படும். ராஜாவாக புதன் இருப்பதால் காற்று அதிகம் வீசும் நாடுகளுக்கு இடையே போர் வரும். மந்திரியாக சந்திரன் இருப்பதால் நல்ல மழை பெய்யும் தானிய உற்பத்தி பெருகும் மக்கள் உடல் நலம் பெறுவர்.

வெண்பா பலனாக உலகின் சில பகுதிகளில் நோய் பாதிப்பு பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என்று பலன் கூறப்பட்டது.

 நல்ல மழை தானிய விளைச்சல் சார்வரி பலன் சொல்கிறது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...