Saturday, May 30, 2020

இது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🙏

அனைத்திற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல், குறை கூறாமல் நம் நாட்டின் நன்மைக்கு, நமது பங்காக, நமது பழக்க வழக்கங்கள், நாம் வாங்கும் பொருட்கள் ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்தால் மட்டும் போதும்
சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்திய பொருளாதாரம் ஒரு பெரிய எழுச்சியினை காணச் செய்ய முடியும்
இந்த கட்டுரையை எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றேன், அது உண்மைதான். இதை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியும்.
இங்கே ஒரு சிறிய எடுத்துக்காட்டு: -
2012 இல் 1 $ = IND ரூ 52
இப்போது 1 $ = IND ரூ 76
நமது நாட்டின் பொருளாதாரம் நமது கைகளில்தான் உள்ளது ....
அழகுசாதனப் பொருட்கள், தின்பண்டங்கள், தேநீர், பானங்கள் போன்ற, மிக அத்தியாவசியம் அல்லாத பொருட்களின் மீது 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நிய செலாவணி நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறது
அவை இங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும் பெரிய வேலை வாய்பையோ, தொழில் நுட்பத்தையோ, அறிவியல் அறிவையோ நமக்கு கொடுக்க வில்லை, மாறாக, மாயாஜால வார்த்தைகளால், கவர்ச்சியான விளம்பரங்களால் மூளைச்சலவைசெய்து கொழுத்த லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு
உற்பத்தி செய்ய 70/80 பைசா மட்டுமே செலவாகும் ஒரு குளிர் பானம் ரூ .15 க்கு விற்கப்படுகிறது மேலும் இவற்றிலிருந்து கிடைக்கும் பெரும் லாபம் அவர்கள் நாடுகளுக்கு அனுப்பபடுகிறது. இது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது
அதன் தாக்கம் நம் அன்றாட மற்றும் எதிர்கால வாழ்வை கீழே கொண்டு செல்லும்.
பன்னாட்டு நிறு வனங்களுக்கு எதிராக என்று அல்ல , ஆனால் நம் சொந்த நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆவது இந்திய தயாரிப்புகளை மட்டுமே, தங்கள் மனசாட்சிபடி முடிந்தவரை பயன்படுத்துவது இந்தியர் ஆகிய நம் அனைவரின் கடமையாகும்.
நாம் இதைச் செய்யா விட்டால், ரூபாய் மேலும் மதிப்புக் குறையும், எதிர்காலத்தில் இதே தயாரிப்புகளுக்கு அதிக பணம் செலுத்துவோம்.
இதைப் பற்றி நீங்கள் என்ன செய்ய முடியும்?
1. WHOLLY OWNED INDIAN COMPANIES தயாரிக்கும் தயாரிப்புகளை மட்டுமே வாங்கவும்
2. இந்த முயற்சியில் முடிந்தவரை பலரைச் சேர்க்கவும் .....
ஒவ்வொரு நபரும் இந்த விழிப்புணர்வுக்கு ஒரு தலைவராக மாற வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மையும், நம் நாட்டையும் காப்பாற்ற இது ஒன்றே நம் எல்லோராலும் இயன்ற ஒரே வழி.
உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் கைவிட தேவையில்லை. நீங்கள் ஒரு மாற்று தயாரிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
ஏற்க மற்றும் தவிர்க்க வேண்டிய தயாரிப்புகளின் பட்டியல், ஒரு புரிதலுக்காக:
குளிர்பானம்:-
எலுமிச்சை சாறு, இளநீர், புதிய பழச்சாறுகள், குளிர்ந்த லாசி , பட்டர் பால், தேங்காய் நீர், ஜல் ஜீரா, மசாலா பால், மோர்
தவிர்க்க வேண்டியவை
கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா, ஸ்பிரைட்......
பாத் சோப்: -
சிந்தோல் மற்றும் பிற கோத்ரேஜ் பிராண்ட்ஸ், சாந்தூர், விப்ரோ ஷிகாக்கி, மைசூர் சந்தல், மார்கோ, நீம், எவிடா, மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா பாத் மற்றும் சந்திரிகா ஆகியவை.....
தவிர்க்க வேண்டியவை
LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, LESANCY, CAMAY, PALMOLIVE.......
டூத் பேஸ்ட்: -
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MESWAK , pathanjali products பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
டூத் பிரஷ்: -
PRUDENT, AJANTA, PROMISE ஐப் பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B
சவரக்குழைவு:-
கோத்ரேஜ், எமாமியைப் பயன்படுத்துங்கள்
தவிர்க்க வேண்டியவை
பாமோலிவ், ஒல்ட் ஸ்பைஸ், கில்லட்..
பிளேட்: -
சூப்பர்மேக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்
தவிர்க்க வேண்டியவை
செவன்-ஓ-க்ளாக், 365, கில்லெட் .....
டால்கம் பவுடர்: -
சாந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்ளஸ்... ஆகியவற்றைப் பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன் & ஜான்சன் பேபி டால்க், ஷவர் டு ஷவர்.....
பால் பௌடர்:-
இந்தியா, அமுல், அமுல்யாவைப் பயன்படுத்துங்கள்
தவிர்க்க வேண்டியவை
அனிக்ஸ்ப்ரே, மில்கானா,
எவ்ரிடே மில்க், மில்க்மெய்ட்.....
ஷாம்பு: -
LAKME, NIRMA,, VELVETTE ஐப் பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
ஹாலோ, ஆல் கிளியர், நைல், சன்சில்க்,
ஹெட் & ஷோல்டர்ஸ், டோவ் ,பாண்டீன்...
மொபைல் தொடர்புகள்: -
பிஎஸ்என்எல், ஏர்டெல்... ஜியோ, பயன்படுத்தவும்.
உணவு பண்டங்கள்:-
தந்தூரி சிக்கன், வட பாவ், இட்லி, தோசை, பூரி, உப்புமா.... சாப்பிடுங்கள்
தவிர்க்க வேண்டியவை
KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W....
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இந்திய தயாரிப்புக்கும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய வித்தியாசம் காணும். இது இந்தியாவை வீழ்ச்சியில் இருந்து காக்கும். இன்று ஒரு உறுதியான முடிவை எடுப்போம்.
இந்தியராக இருக்க, வாங்க, நாம் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு எதிரானவர்கள் அல்ல.
நாம் நம்மை மற்றும் நம் தேசத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பல உயிர்களை இழந்து, தியாகங்கள் பல செய்து,மிகுந்த முயற்சிக்குப் பிறகு நாம், நம் விருப்பத்தை அடைந்தோம்.
நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. தற்போதைய போக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கலை நுழைக்கின்றன.
நம் நாட்டை பொறுத்தவரை, இது இந்தியாவின் மறு-காலனித்
துவமாகும். காலனிஸ்ட்டுகள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர், ஆனால் பொருளாதார காலனிஸ்ட்டுகளாக களம் இறங்கி உள்ளனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: பொருளாதார சுதந்திரம் இல்லாமல் அரசியல் சுதந்திரம் பயனற்றது
ருஷியா, தென்கோரியா, மெக்ஸிகோ...... பட்டியல் மிக நீண்டது !! அவர்களின் அனுபவத்தில் இருந்தும் மற்றும் நம் வரலாற்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு உண்மையான இந்தியனும் தன் கடமையை செய்யட்டும்.
நமக்காக, நம் நாட்டிற்காக குறைந்த பட்சம் வெளிநாட்டுப் பொருட்கள் வாங்குவதை விட்டுக் கொடுங்கள். இந்த விழிப்புணர்வை உருவாக்க இந்த குறிப்பை உங்கள் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து, செயல் படுத்தி பயனுற செய்யுங்கள் ... !!
சிறு துளி,பல சேர்ந்தால் பெரு வெள்ளம்,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு இந்தியராக முயற்சி செய்யுங்கள், முயன்றால் முடியும்! 🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...