Wednesday, May 27, 2020

உங்களின் உழல் பட்டியல் ரெடிமேடாக உள்ளது.

அ.தி.மு.க.வின் உழல் பட்டியலை தி.மு.க.தயார் செய்யும் என்று திரு.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் இனிதான் நீங்க தயார் செய்யணும் திரு.ஸ்டாலின் அவர்களே எங்களிடம் உங்களின் உழல் பட்டியல் ரெடிமேடாக உள்ளது அவற்றை இங்கு வெளியிடுகிறேன் திமுகவினர் படித்து பயன்பெறவும்.

1. 2001 மாண்புமிகு அம்மா அரசில் சென்னையில் கட்டப்பட்ட பல மேம்பாலங்களில் பல கோடி உழல் நடந்ததாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர் திரு.கருணாநிதி.
2. வீராணம் எனும் வீனாய் போன திட்டத்தில் வெறும் சிமெண்ட் குழாய்களை மட்டும் பதித்துவிட்டு திட்டம் வெற்றி என பல கோடிகளை ஆட்டைய போட்டது திரு.கருணாநிதி.
3. கூவம் தூய்மை பணி அழகுபடுத்தும் பணி என பேரவையில் பல கோடிகளை ஒதுக்கிவிட்டு இரவோடு இரவாக தன் அல்லக்கைகள் மூலம் சில முதலைகளை கூவத்தில் விட்டு முதலை நடமாட்டம் என நாடகமாடி பல கோடிகளை ஆட்டய போட்டது திரு.கருணாநிதி.
4.2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தன் ஆசைமகள் கனிந்த மொழி மூலமாகவும் அவரின் ஆசை மன்மத ராசா மூலமும் 1.76 லட்சம் கோடிகளை சத்தமே இன்றி ஆட்டய போட்டது திரு.கருணாநிதி.
5. சர்கரையை எறும்பு தின்றது நெல்மூட்டைகளை எலி தின்றது சாக்குபைகளை கரயான் தின்றது என உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து புதுமுறையில் ஊழல் செய்தவர் திரு.கருணாநிதி.
6. ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சர்காரியா கமிஷன் கருணாநிதியின் ஊழல்களை விசாரித்து தலைசுற்றி இறுதியில் அவருக்கு வழங்கிய உலகமகாப் பட்டம் விஞ்ஞான ஊழல்வாதி.
7. ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களில் திரு.கருணாநிதி வழிகாட்டுதல்படி ஊழல் செய்து அந்த வழக்குக்காக இன்றளவும் வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் நடையாய் நடந்துகொண்டிருப்பது திரு.கருணாநிதியின் உத்தம பேரன் திரு.தயாநிதிமாறன்.
8. கலைஞர் டி.வி.க்காக 200 கோடிகளை திருட்டுதனமாக கைமாற்றி அதற்க்காக தனது கோபாலபுரம் வீட்டை நீதிமன்றமாக மாற்றிய மகா பெருமைகள் எல்லாம் திரு.கருணாநிதி ஒருவரையே சாரும்.
9. சன் டி.வி.க்காகதான் தொலைதொடர்ப்பு துறை அமைச்சராக இருந்தவேளையில்அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல நூறு தொலைபேசி இணைப்புகளை முறை கேடாக பெற்ற சாதனைக்கு சொந்தகாரர் கருணாநிதி பேரன் திரு.தயாநிதிமாறன்.
10. இலங்கையில் 1.5 லட்சம் உயிர்கள் பலியான வேளையில் தன் கட்சிக்கு மந்திரி பதவிகளை பெற்று 2G நிலக்கரி சுரங்க முறைகேடு காமன்வெல்த் என்று பல ஊழல்கள் மூலம் பல லட்சம் கோடிகளை வாரி குவித்தவர் திரு.கருணாநிதி.
11. ஊழலில் சிக்கிய திரு.ஆ.ராசாவை ஒரு தலித் என பழிவாங்கபடுகிறார் என நீழி கண்ணீர் வடித்துவிட்டு தன் மகளின் ஜாமினுக்காக சோனியா மன்மோகன் வீட்டுக்கு நடயாய் நடந்த யோக்கியவான் திரு.கருணாநிதி.
12. 2 G ஊழல் வழக்குக்காக 18 மாதம் திகார் சிறையில்களி தின்ற மத்திய அமைச்சரையும் நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்ட கட்சி தி.மு.க.
13.ஊழல் வழக்குக்காக சிறை சென்ற அதிக நபர்களை கொண்ட கட்சி தி.மு.க.(ஆ.ராசா, கனிமொழி, கோ.சி.மணிமகன், செல்வகணபதி,) இப்படி பல யோக்கிய சிகாமணிகளை கொண்ட இயக்கம் தி.மு.க.
14. ஏறக்குறைய 18 வருட காலம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து மாநிலத்தின் பல உரிமைகளை அடகு வைத்து காவு கொடுத்து பல லட்சம் கோடிகளை வாரிசுருட்டிய கட்சி திரு.கருணாநிதி தலைவராக வழிநடத்திய தி.மு.க
15. இன்றும் பல ஊழல் வழக்குகளுக்காக முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள் முன்னாள் இன்னாள் MP, MLA முதல் சாதாரண உள்ளாட்சி பொறுப்பளர்கள் வரை அங்கம் வகிக்கும் கட்சி தி.மு.க. மறவாதீர்.
இவ்வளவு அருமை பெருமைகளை கொண்ட தி.மு.க.வுக்கு தலைவராக இருக்கும் திரு.ஸ்டாலின் ஊழல் குறித்து பேசுவது சாத்தான் ஓதும் வேதம் போல் உள்ளது.
( நண்பர்களே உங்களின் ஆதரவையும் கருத்துகளையும் பொறுத்து திமுக. குறித்த இதுபோன்ற பல கட்டுரைகளை எழுத உள்ளேன் உங்களின் நல் ஆதரவை தாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.)
இந்த பணி 2021 பேரவை தேர்தலில் திமுகவை படுதோல்வி அடைய செய்யும்வரை தொடரும்.
(நன்றி)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...