Thursday, May 28, 2020

இதையெல்லாம் திராவிடக் கட்சித் தலைவர்களிடம் பார்த்திருக்கிறோமா?

உங்களுக்கு நினைவிருக்கும், தேவேந்திர ஃபட்நாவிஸ் மஹாராஷ்ட்ர முதல்வராகப் பொறுப்பேற்ற பொழுது, அவர் மனைவியின் ட்ரான்ஸ்ஃபருக்காகக் காத்திருந்து ஓரிரு நாள் கழித்து தான் புனேயிலிருந்து மும்பைக்கு வந்தார். அவர் மனைவி ஒரு தனியார் வங்கியில் மேனேஜர். இப்ப வரை அவர் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்.
மதன்லால் குரானா டெல்லி முதல்வர் பதவியிலிருந்து இறங்கிய போது லக்கேஜ்களை டெம்போவில் அனுப்பி விட்டு தன் குடும்பத்துடன் சிட்டி பஸில் திரும்பினார்.
முதல்வராக இருக்கும் காலத்தில் மனோகர் பாரிக்கர் பல நேரங்களில் ஸ்கூட்டரில் தான் அலுவலகம் சென்றார்.
தமிழகத்தில் மிகப் பிரபலமான பாஜக தலைவரின் மகள் ஒருவர், மிக இயல்பாக ஒரு பரிவாரில் சாதாரண காரியகத்ரியாக தினமும் பணியாற்றி வருகிறார். (பெயர் குறிப்பிட விரும்பவில்லை)
யோகி ஜியின் குடும்பம் இன்றைக்கும் சுயமாக உழைத்து தான் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஒழுக்கசீலர். எதிர்கட்சிகள் கூட பேச்சுக்குக் கூட அவரை இந்த விசயத்தில் ஒரு குறையும் சொல்ல முடியாது. முடியவில்லை.
(இதில் எடியூரப்பா மாதிரி விலக்குகள் ஒன்றிரண்டு உண்டு)
இதெல்லாம் சங்க வளர்ப்பு. பதவி என்பது தனக்கு இடப்பட்ட பொறுப்பு. அதைத் திறம்படச் செய்வதைத் தாண்டி பதவியைப் பயன்படுத்தி சுயலாபம் அடையக் கூடாது என்ற ஒழுக்கம்.
இப்ப தமிழக பாஜக மாநிலத் தலைவரின் மனைவி ஒரு மருத்துவர். கணவரின் செல்வாக்கு/பதவியைப் பயன்படுத்தி வீட்டில் சொகுசாக இருந்திருக்கலாம். ஆனால், கொரானா வார்டுக்கு பணிக்குச் செல்கிறார். அடுத்த பதினைந்து நாட்கள் குடும்பத் தொடர்பின்றி மற்ற மருத்துவர்கள் போல தானும் சேவை செய்யக் கிளம்பியிருக்கிறார்.
இதையெல்லாம் திராவிடக் கட்சித் தலைவர்களிடம் பார்த்திருக்கிறோமா? நம்ம கண்ணுக்கு இப்படி எதார்த்த அரசியல்வாதிகளை விட பல கார்கள் முன்னேயும் பின்னேயும் படையெடுக்க வரும் கழக மா.செ - க்களைப் பார்த்தால் தான் உயர்வாகத் தெரிகிறது.
நமக்குக் கிடைக்கும் நல்ல அரசியல்த் தலைவர்களை நாம் தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட அரசியல்க் கலாச்சாரத்திலிருந்து வெளியே வந்தால் தான் இவர்களையெல்லாம் நமக்காக நிறைய பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வாழ்த்துகள் சகோதரி.
படத்தில் கொரான தொற்றுள்ளவர்களுக்காகப் பணிக்குச் செல்லும் திருமதி எல்.முருகன் அவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...