Saturday, May 23, 2020

அருமையான உவமை.

ஒரு காலை நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...
அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள்.
ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்கிறார்.
இரண்டாவது: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்கிறார்.
மூன்றாவது: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்கிறார்.
நான்காவது: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்கிறார்.
ஐந்தாவது: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்கிறார்.
ஆறாவது: அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...
அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தெய்ப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.
தற்போது எல்லா டிவி, சோசியல் மீடியாக்களில் வல்லுனர்கள் என, கொரானா வைரஸ் பற்றியும், மற்ற நாட்டு நடப்புகளை பற்றியும் வந்து பேசுபவர்கள், இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள்.
அதையும் கேட்டு கொண்டு இருப்பது மக்களாகிய நமது விதி..வேறு வழியில்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...