Saturday, May 23, 2020

அமரர் ஜெயலலிதா தன் இறப்பினில் இரண்டு மிகப்பெரிய உண்மையை விட்டுச் சென்றிருக்கிறார் நமக்காக.

என்ன தெரியுமா அது...?
(1)ஆரோக்கியம் இல்லாவிட்டால் நாட்டுக்கே ராஜாவானாலும் எமனிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.எனவே
உடல் நலம் பேனுவோம்,
வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வோம்,
தினம் தினம் உடல் பயிற்சி,உடல் எடை மேலாண்மை என ஆரோக்கியமான வாழ்விற்கு ஆச்சாரம் இடுவோம்.
(2)எவ்வளவு பணமிருந்தாலும்,
எத்துணை பெரிய பதவியில் இருந்தாலும்...
பிள்ளைகளே.. பெற்றோர்களே.. மருமகள்களே.. மாமியார்களே.. அண்ணன் தம்பிகளே.. அக்கா தங்கைகளே.. அத்தை மாமாக்களே.. சித்தி சித்தப்பாக்களே.. தம்பி தங்கைகளே.. இன்னும் மீதமிருக்கும் அனைத்து உறவுகளே...
ஓடுங்கள்.. ஏதாவதொரு காரணத்தால் பிரிந்திருக்கும் உங்கள் இரத்த உறவுகளை நோக்கி ஓடுங்கள். இருக்கும் காலத்திற்குள் பகையழித்து இணைந்து வாழுங்கள். உறவின் வலிமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனென்றால்.. தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று வாழ்ந்து காட்டிய இவராலேயே.. உறவுகள் உடனில்லாத காரணத்தால் தனது கடைசி 75 நாட்களை என்னவென்று கூட அறிய முடியவில்லை.
உண்மையான அன்பின் கண்ணீர் ஒரு சொட்டுக் கூட இவர் உடலின் மேல் விழவில்லை. தரையில்தான் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.
நமக்கும் இந்நிலை வேண்டாம். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் காக்க மட்டுமல்ல.. உயிர் உணர்த்தவும் இரத்த உறவுகள் தேவை.
இதுதான் கடைசியாய் இவரிடம் கற்ற பாடம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...