Friday, May 22, 2020

ஜோதிமணி... #கரு_நாகராஜன்...

பிஜேபி - மோடியை மக்கள் இன்னும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி பேசியதற்கு பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் மூன்றாம் தர பெண் என விமர்சித்தது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை கல்லால் அடிப்பதாக ஜோதிமணி விமர்சித்ததால் தான் கரு. நாகராஜன் அப்படி பேசவேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் கரு.நாகராஜனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கரு.நாகராஜன், '’தரம் கெட்ட பேச்சால் விவாதத்திலிருந்து வெளியேறினேன் - ஜோதிமணி. தரம், தராதரம் எதுவுமே..உங்கள் கட்சிக்கும், உங்கள் கூட்டணி கட்சிக்கும் எள்ளளவு கூட இல்லை. தினை விதைத்தவன் தினையறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான். இதுக்கே மெர்சல் ஆனா எப்படி? இத்தாலி அடிமைகள் தரத்தை பற்றி பேசுவதும், முரசொலி முட்டாள்கள் ஆபாசத்தை பற்றி பேசுவதும், ஓசி சோறுகள் கண்ணியத்தை பற்றி பேசுவதும்.. கொரோனாவை விட கொடுமை’’எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு கரு நாகராஜன்
என்பவர் மகாப்பெரிய ஆளுமையாகத்
தோன்றலாம். எனவே இந்த மொத்தத் தமிழ்நாடுமே
கரு நாகராஜன் என்பவரைப் பற்றிக் கொண்டு,
அவரையே மையமாகக் கொண்டு பேசித்திரியலாம்.
இங்கு நாம் கரு நாகராஜன் மிகச்சிறந்த நாகரிகமான அரசியல் வாதி என அவருக்கு பாராட்டு பத்திரங்கள் வாசிக்க வரவில்லை அது அவர் கட்சிக்காரர்கள் வேலை...
நான் அறிந்தவரை தொலைக்காட்சி விவாதங்களில் இந்த பெண்மணியின் பேச்சு மிகவும் கண்ணியக்குறைவாகவே இருக்கும்...
முனை மழுங்கிப்போன வாதங்களையே வைப்பார்...
பல நேரங்களில் நாலாந்தர நடையில் தான் பேசுவார்..
‘’ஜோதிமணி என்ற பெண்ணுக்காக பரிந்து பேசும் நல்ல உள்ளங்கள் ஒருவராவது முன்னாள் பாஜக தலைவர் தமிழிசையின் உருவத்தை கரகாட்டக்காரி என கேலி செய்தபோது இந்த நடுநிலை ஜனநாயக வாதிகள் எவராவது கண்டறிந்திருக்கிறார்களா.???
வன்முறை அரசியலை நோக்கி சமூகத்தை நகர்த்துகிறது காங்கிரஸ் கட்சி. பிரதமர் நரேந்திர மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று பாராளுமன்ற எம்பி ஜோதிமணி பேசியது வன்முறையை தூண்டும் அரசியல். எம்.பி யாக இருந்து கொண்டு பிரதமர் மீது வன்முறையை தூண்டியது மூன்றாம் தர பெண்ணின் பேச்சு தான்’’
இதில் ஒன்றும் ஐயமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...