Monday, May 25, 2020

இந்தியாவை பாதுகாக்கும் இந்து மஹா சமுத்திரம்-

உலகில் உள்ள ஐந்து பெருங்கடல்களிலு ம் ஐ நா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில் ஒரு பெருங்கடலுக்கு ஒரு நாட்டின் பெயர் இருக்கிறது என்றால் அது நம்முடைய இந்திய பெருங்கடல் தாங்க
இந்தியாவின் பாதுகாப்பில் வடக்கில் உ ள்ள இமயமலை எவ்வளவு முக்கியமான தோ அதை விட தெற்கில் உள்ள இந்திய
பெருங்கடல் மிக முக்கியமானது.அதே நேரத்தில் சீனாவுக்கு அதன் வர்த்தக
பயன்பாட்டிற்கு இந்திய பெருங்கடல் இ ன்றியமையாது.
இதனால்தான் இந்தியாவும் சீனாவும் இந்தியப்பெருங்கடலில் உள்ள்நாடுகளு
க்கு அவர்கள் கேட்பதை எல்லாம் அள்ளி க்கொடுத்து அவர்களை தங்கள் கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வருகின்றன
இந்தியாவின் கடல் பிராந்தியத்தின் அங்கமான இந்தியப் பெருங்கடல் வழியா கத்தான் சீனாவின் பெரும்பான்மையா ன வர்த்தகம் நடைபெற்று வருகிறது
சீனாவின் தென்சீனக்கடலில் இருந்து கிளம்பும் சீனக் கப்பல்கள் மலேசியாவி ன் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைந்து சீனாவில் உற்ப த்தியாகும் 80% பொருட்களை மேற்கா சியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்கிறது.
இந்தியப்பெருங்கடல் நாடுகளில் மொசா ம்பிக் மொரி சியஸ் மாலத்தீவு மடகாஸ்கர் நாடுகளில்கடலோர கண்காணிப்பு ரேடார் ஸ்டேசன்ளை அமைத்து இந்திய பெருங் கடலை கண்காணிக்கிறோம் என்று கூ றிக்கொண்டு இந்திய கடற்படை அங்கே ஓய்வு எடுத்துக் கொண்டு வருகிறது
இந்தியப் பெருங்கடலில் மேற்கு எல்லை
என்று செசல்ஸ் தீவுகளை தான் கூற
வேண்டும். இதன் கடல் பரப்பு வழியாக த்தான் சீனாவின் வர்த்தக கப்பல்கள் ஆ ப்பிரிக்க நாடுகளுக்கு சென்று கொண்டு
இருக்கிறது.
இந்திய பெருங்கடலில் சீனக்கப்பல்கள்
நுழையும் பகுதியாக இருப்பது மலாக்கா
நீரிணைப்பு தான்.
இந்த நீரிணைப்பு தான் சீனாவின் தென் சீனக்கடல் என்று சொல்லப்படும் பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கட லையும் இணைப்பதாக அமைந்துள்ளது. இந்த மலாக்கா வழியே ஆண்டு தோறும் 80,000 க்கும் மேறபட்ட கப்பல்கள் பய ணிப்பதாகக் கூறப் படுகிறது. ஒரு நா ளைக்கு மட்டும் சுமார் 250 கப்பல்கள் ம லாக்கா நீரினைப்பின் வழியாக வந்து போய் கொண்டிருக்கிறது.
மலாக்கா நீரிணை வழியாக செல்லு ம்க ப்பல் களை இது எந்த நாட்டுக்கு போகி றது எங்கிருந்து வருகிறது என்று ஆராய் ந்தால் அதில் பாதிக்கும் மேல் சீனா வின் பெயரை சொல்லிக் கொண்டே இந்து ம ஹா சமுத்திரத்தில் போய்க்கொண்டி ரு க்கிறது.ஆக இந்திய பெருங்கடல் இந்தி யாவை விட சீனாவைத்தான் அதிகளவி ல் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.
இதனால் தான் இந்தியப்பெருங்கடல் நாடுகளான இலங்கை மாலத்தீவு மொரி சியஸ் செஷல்ஸ் மட காஸ்கர் ஆகிய நாடுகளில் துறைமுகத்தை நவீனமாக்க ல் என் கிற பெயரில் நுழைந்து லட்சக் கணக் கான கோடிகளை செலவழித்து அந்த நாடுகளில் ஊடுருவி இந்தியப் பெருங்கடலை கண்காணித்து வருகிறது
சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூ ழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல்பரப்பிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று போர் வல்லுனர்கள் கூறிவருகிறார்கள். போரின் பொழுது சீ னாவின் பொருளாதாரத்தை முடக்க நி னைக்கும் இந்தியா செய்யும் முதல் காரி யம் என்னவென்றால் இந்தியப்பெருங்க டல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் சீன கப்பல்களை தான் குறி வைக்கும்.
அதுவும் மலாக்கா நீரிணைப்பை தான் இந்தியா குறி வைக்கும். இந்த மலாக்கா நீரிணைப்பு தான் உலகியிலேயே டிராபி க் நிறைந்த கடல் பகுதி.மலேசியத் தீபக ற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சும த்திராத் தீவுக்கு மிடையில் உள்ள 805 கி லோமீட்டர் நீளமான இந்த மலாக்கா நீரி ணைப்பிறகு இந்த பெயர் வரக் காரணமா னவர் யார் தெரியுமா?
மகாராஜா பரமேஸ்வரா என்கிற சிங்கப்பூ ரை ஆண்ட ஒரு இந்து மன்னர் தான் கார ணம்.என்னடா சிங்கப்பூர் நாடே இப்பொ ழுது தானே உருவாகியது.அதற்குள் அ ங்கே எப்படி இந்து மன்னர் நுழைந்தார் என்று நீங்கள் கேட்கலாம்.அந்த காலத்தி ல் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் சோழ மன்னர்களால் ஆளப்பட்டதால் அ வர்கள் வழியாக அங்கே இந்துமதம் செழி த்து இருந்தது .
அந்த வழியில் வந்தவர் தான் பரமேஸ்வ ரா .கிபி 1389 ல் இருந்து 1401 வரை சிங்க ப்பூரை ஆட்சி செய் தவர்அந்த காலத்தில் சிங்கப்பூர் நாட்டுக்கு துமாசிக் என்று பெ யர் அதற்கு பிறகு இந்தோனேசியா வின் ஜாவா வில் இருந்து பெரும் படையுடன் வந்த மஜா பாகித் அரசன் பரமேஸ்வ ரா வை தோற்கடித்து அன்றைய சிங்கப்பூரி ல் இருந்து அவரை துரத்தி விடுகிறான்.
சிங்கப்பூரை விட்டு ஓடி வந்த பரமேஸ்வ ரா ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று தலையை தட விக் கொண்டு இருக்கிறார் அப்பொ ழுது ஒரு சருகு மான் நாயை அடித்து துரத் தும் காட்சியை பார்க்கிறார் .அப்பொழுது அவ ருக்குள் ஆகா ஒரு்மானே நாயை அடித்து துரத்தும் பொழுது மனுஷனான என்னா ல் ஏன் முடியாது என்று நினைத்து அந்த மரத்தின் அடியிலேயே ஒரு அரசாங்கத்
தை உருவாக்குகிறார்.
.
அந்த அரசு தாங்க மலாக்கா பேரரசு.. பர
மேஸ்வராவுக்கு ஞானம் கொடுத்த அந்த மரம் ஒரு மலாக்கா மரம்.அதனாலே இ ப்பொழுது மலேசியாவின் மாநிலமாக இருக்கும் மலாக்கா மாநிலத்திற்கும் சீ னாவின் வர்த்தகத்திற்கும் வருங்கால த்தில் இந்து மகா சமுத் திரத்தில் எழுத ப்படும் இந்தியாவின் வெற்றிக்கும் கார ணமாக இருக்கும் மலாக்கா நிரிணை ப்பி ற்க்கும் மலாக்கா என்று பெயர் வந்தது
அது என்னப்பா மலாக்கா என்று கேட்கி றீர்களா.. நெல்லிக்காய் மரத்தைத்தான் மலாய் மொழியில் மலாக்கா என்று சொ ல்கிறார்கள். ஆக நெல்லிக்காய் தமிழ் மன்னனான அதியமானுக்கு மட்டுமல்ல சிங்கப்பூர் நாட்டின் மன்னன் பரமேஸ்வர னுக்கும் அறிவுரை கூறி யுள்ளதற்கு இந்த மலாக்கா நீரிணைப்பையே சொல்லலாம்.
சரிப்பா விஷயத்துக்கு வா என்று கேட்கி றீர்களா.. இதோ வந்து விட்டேன்.. மலா க்கா பெயர் உருவாக எப்படி மான் நாயை வீழ்த்திய வரலாறு காரணமானதோ அதே இடத்தில் சீனா என்கிற ஓநாயை வீழ்த்த இந்தியா என்கிற புள்ளிமான் காத்திருக்கிறது.
இந்தியா சீனாப்போர் உருவாகின்ற சூ ழ்நிலை உள்ள இந்த நேரத்தில் இந்தியா வுக்கு மலாக்கா நீரணைப்பு மிக முக்கிய மான இடம்.போர் நிகழ்ந்தால் இந்தியா வின் டா ர்க்கெட் மலாக்கா நீரிணைப்பு தான் இந்த நீரிணைப்புக்கு அருகாமை யில் இந்தியாவுக்கு சொந்தமான அந்த மான் நிக்கோபார் தீவுகள் உள்ளது .இந்த இடத்தில்தான் இந்தியாவின் முப்படை களும் ஒருங்கிணைந்து இந்திய பெரு ங்க டலை காத்து வருகிறது
இந்திய கடற்படையை விட சீன கடற்ப டை வலிமையாக இருந்தாலும் சீன போர்கப்பல்கள் மலாக்கா நீரி ணைப்பு வழியாகத்தான் இந்திய பெருங்கடலில் நுழைந்து இந்தியாவை தாக்க முடியும்.
ஆனால் 40 கிலோ மீட்டர் அகலமே கொ ண்ட மலாக்கா நீரிணைப்பு வழியே சீன ப்போர்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலி ல் நுழையும் முன்பே அந்தமான் கடலில் காத்திருக்கும் இந்திய வான் படை கடற் படைகளால் வீழ்த்தப்படும்
.
ஏன் மலாக்கா நீரிணைப்பையே இந்திய கடற்படையினர் அலாக்காக தூக்கி விடு வா ர்கள்.இன்னொரு விஷயம் தெரியு மா? இந்த மலாக்கா நீரிணைப்பை விட்டு விட்டு அதற்கு தெற்கில் உள்ள சுந்தா நீரி ணைப்பின் வழியாகவும் இந்திய பெரு ங்கடலுக்குள் சீனாவின் போர்க்கப்பல்க ள் நுழைந்து இந்தியாவை தாக்க முடியும்.
இந்த சுந்தா நீரிணைப்பு மலாக்கா நீரி ணைப்புக்கு நேர் கீழே இந்தோனே சியா வின் ஜாவா தீவுகளுக்கு பக்கத்தில் உள்ளது.
ஆனால் அதற்கும் வழியில்லாமல் அமெ ரிக்கா தடுத்து நிற்கிறது.ஆஸ்திரேலியா நாட்டை சார்ந்த கோகோஸ் தீவுகளில் அ மெரிக் காவின் அதிநவீன வான் படை மற்றும் கடற்படை உள்ளது.இந்த தீவுகளி ல் இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா கடற்படையினர் பொழுது போக அடிக்கடி போர் பயிற்சிகள் மேற் கொள்வது வழக்க ம்.இவர்களை கடந்து சீனப்போர் கப்பல்க ள் இந்தியப்பெருங்கடலில் நுழைந்து இந்தியாவை தாக்கிவிடுமா?
பாருங்கள் சீனக்கப்பல்கள் இந்தியாவை தாக்க வருகின்ற வழிகள் இரண்டே இர ண்டு தான்.ஒன்று மலாக்கா நீரிணைப்பு இன்னொன்று சுந்தா நீரிணைப்பு. இதில் மலாக்கா வழியாக வரும் கப்பல்கள் அந்தமானில் உள்ள இந்திய முப்படைக ளை தாண்டித்தான் வர முடியும்.
அதேமாதிரி சுந்தா நீரிணைப்பின் வழி யாக இந்தியப் பெருங்கடலு க்குள் நுழை யும் சீனப்போர்கப்பல்கள் அந்த மான் தீவுகளுக்கு நேர் கீழாக உள்ள ஆஸ்திரே லியாவின் கோகோஸ் தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்படையை தாண்டித்தான் இந்தியாவை தாக்க முடியும்.
இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா? ஆனால் இந்திய அமெரிக்க கடற்படைக ள் நினைத்தால் சீனாவின் சரக்கு கப்ப ல்களை இந்திய பெருங்கடலில் மூழ்கடித் து விட முடியும். இந்தியப்பெருங்கடல் எ துக்கு? இந்தியாவும் அமெரிக்காவும் நி னைத்தால் அமைதிக் கடலான பசிபிக் பெருங்கடலிலேயே சீனாவுக்கு பாடை கட்ட முடியும்.
இதனால் தான் சீனாவின் ராணுவ ஆ லோசகர்கள் இந்தியாவோடு சண்டை போடணும்னா ஒன்றுக்கு பத்துதடவை அல்ல நூறு தடவை கூட யோசிச்சு செய்யு ங்க என்றுசீன அரசாங்கத்தை எச்சரித்து வரு கிறார்கள். எனவே இந்து மஹா சமு த்திரம் இந்தியா வை என்றும் பாதுகா க்கும் என்று உறுதியாக கூற முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...