Thursday, October 22, 2020

சொந்த கிராமத்திற்கு செய்யும் உயர்ந்த உள்ளம் வாழ்க பல்லாண்டு.

 படத்தில், வேஷ்டி சட்டையுடன், நம் பாரம்பரியத்தைக் காட்டும் அழகான கிராமக் கட்டிடத்துக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் “நவயுக டாடா” யார் தெரியுமா?

இவர் தான் ஸ்ரீதர் வேம்பு! உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) !
ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்! அங்கு தான் இருந்தது.
அதன் தலைமையகத்தை, போன ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்!
இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள்!
மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு போவது சைக்கிளில் தான். சாப்பிடுவதும், டீ அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் தான்.
கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றை அக்கறையுடன் மத்தளம்பாறைக்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவின் கிராமங்களில் உள்ள 8000 இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி கொடுத்து , வேலை வாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இந்த உண்மையான தமிழன்!
மோடி எதிர்பார்த்திருக்கும் ஆதர்ஷ இந்தியர் ஸ்ரீதர் வேம்பு தான். இவர் மாதிரி மாநிலத்துக்கு 10 வழிகாட்டிகள் இருந்தால், நம் நாடு பத்தே ஆண்டுகளில் , அமெரிக்கா, சைனா ஆகிய நாடுகளை எளிதில் முன்னேறிச் சென்று விடும் என்பதில் ஐயம் இல்லை!
தமிழன் என்று சொல்லடா ! தலைநிமிர்ந்து நில்லடா ! -
Image may contain: 1 person, tree and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...