Thursday, October 15, 2020

நவராத்திரி ஸ்பெஷல் !

நவராத்திரியில் அம்பாளை வழிபடவேண்டும். அம்பாளை வழிபட்டால் என்ன கிடைக்கும்?
அவளே சரணம் என்று நம்பிக்கையோடு வழிபட்டால், அம்பிகையாகவே மாறிவிடும் தன்மையும் கிடைக்குமாம். இதையே அபிராமிப்பட்டரும் ‘தெய்வ வடிவம் தரும்’ என்று பாடுகிறார்.
ஓர் உதாரணக் கதை ஒன்று!
பக்தன் ஒருவன், அம்பிகையின் திருமுன்னர் சென்றான். அவளைப் பார்த்த பரவசத்தில் அவனுக்கு வாய் குழறியது. ‘அம்மா, நான் உன் அடிமை’ என்று கூற நினைத்தான். அதற்காக அவளை அழைத்தான். ஆனால், வாய் குழறலிலும், தடுமாற்றத்திலும், எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்தாமல், தட்டித் தட்டிப் பேசிவிட்டான். விளைவு? அவன் குழறிக் குழறிப் பேசியதை, அம்பாள் வேறுவிதமாகக் காதில் வாங்கிக்கொண்டாள்.
‘பவானி, த்வம் தாசே மயீ’ - இது அவன் சொல்ல நினைத்தது; இதன் பொருள்... ‘பவானியே, நான் உனது அடிமை’ என்பது. பதற்றத்தில், அவன் சொன்னது... ‘பவானித்வம் தாசே மயீ’ - அதாவது, பவானி என்று விளித்து நிறுத்தி, அடுத்துத் தொடராமல், அவசரத்தில் பவானித்வம் என்று சேர்த்துவிட்டான்.
பவானி என்பது அம்பாளின் திருநாமம்; பவானித்வம் என்பது அவளாக இருக்கும் தன்மை; அதாவது, அம்பிகையாகவே மாறிவிடும் தன்மை. பக்தன் பதற்றத்தில் சொன்ன சொல், பவானித்வம். அது, அவள் காதில் விழுந்தது. என்ன ஏது என்று யோசிக்கவில்லை. ‘ஓஹோ, அம்பிகையாக இருக்கும் தன்மையைக் கேட்கிறான் போலும்’ என்று உடனடியாக அந்தத் தன்மையை அவனுக்குக் கொடுத்துவிட்டாளாம்! இதனை ஆதிசங்கரர் பாடுகிறார். ஆகவே, நாமும் நவராத்திரியில் அம்பிகையை வழிபட்டு வரம் பெறுவோம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.
Image may contain: 1 person, sitting and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...