Sunday, October 18, 2020

முற்றிலும் உண்மை.

 கடந்த காலத்தை நினைக்காதீர் கண்ணீர் தான் வரும்..!எதிர்காலத்தை எதிர்பார்க்காதீர் பயம் தான் வரும்..! இந்த நிமிடம்,இந்த நொடி தான் உண்மை..!

பல காயங்களையும் வலிகளையும் மறக்க தனிமைநிலை தேவைப்பட்டாலும் அன்புக்குரியவரின் நினைவுகளை திடமாக நினைக்க தனிமையே ஆகச்சிறந்த பரிசாக அமைந்துவிடுகிறது..
தனிமை ஒரு கண்ணாடி நேசியுங்கள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும்...
வாழ்க்கையில்.. நீங்கள் எதை சோதிக்கிறீர்களே அது உங்கள் பலம்..! எது உங்களை சோதிக்கிறதோ அது உங்கள் பலவீனம்..!!
சில நொடி சிக்குண்டு விட்டால்.. வாழ்க்கையை சிறைபிடித்து விடுகிறது சிற்றின்பம்..!!
உறவுகளை சிதைக்க ஊக்க மருந்தாக செயல்படுகிறது.. "ஈகோ"
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே.. சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்..!!
புத்திசாலிகள் பெரும்பாலும் சண்டை போடுவதே கிடையாது ......
ஏனென்றால் அவர்களுக்கு சண்டை போட நேரம் கிடையாது.....
எந்த இடத்தில் உங்களுக்கு அவமானம் ஏற்பட்டதோ......
அந்த இடத்தில் கம்பீரமாக எழுந்து நின்று வென்று காட்டுங்கள் ......
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வழுக்கி விழுந்ததை யாரேனும் பார்த்துவிட்டால் அது உங்களுக்கு அவமானம் ......
யார் பார்த்தாலும் பரவாயில்லை கம்பீரமாக எழுந்து நின்று வென்று காட்டுவதுதான் உங்கள் அடையாளம் .....
யார் என்ன சொன்னாலும் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிப்பாதையில் முன்னேறிக்கொண்டே இருங்கள்.
உங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..!
அது உங்களை அழித்து விடும்... நீங்கள் காப்பாற்ற முடியாத உங்கள் ரகசியத்தை..
மற்றவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதீர்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...