Monday, October 12, 2020

இறைவனடி சேர்ந்தார் .*ஆழ்ந்த இரங்கல்*

 தமிழகமுதல்வர்

ஐயா #எடப்பாடியார் அவர்களின் தாயார் #தவசிஅம்மாள் இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் (93), திங்கள்கிழமை இரவு காலமானார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயிஅம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், திங்கள்கிழமை (அக்.12) இரவு சுமார் 11 மணியளவில், அவரது பூர்வீக இல்லத்தில் காலமானார்.
வயது முதிர்வால் காலமான அவருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம்(எ)விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
கணவர் கருப்ப கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
தாயார் காலமானர் தகவல் அறிந்த தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...