Monday, October 12, 2020

உங்களுக்கு தெரியுமா இந்த சமையலறை குறிப்புகள்?

 1. ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

2. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
3. காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
4. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
5. தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
6. தேங்காயை உடைத்தவுடன் கழுவி, கட் செய்து ஒரு டப்பாவில் போட்டு பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலே ஏற்படும் பிசுபிசுப்பு வராது மற்றும் காயாமல் மற்றும் கெடாமல் இருக்கும்.
7. அரிசி மாவு, கடலை மாவு, உளுந்து மாவு இவற்றில் வடை தட்டும்போது நேரம் ஆகிவிட்டால் வடைதட்ட வராது. ஒரு கைப்பிடி சோளமாவு கலந்து தட்டினால் பதம் சரியாகிவிடும்.
8. அடை தோசை நன்கு கரகரப்பாக இருக்க வேண்டும் என்றால் பாசிபருப்பு கூடுதலாக சேர்க்க வேண்டும்.
9. எந்த மாவாக இருந்தாலும் சிறிது துருவிய மாங்காய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
10. வாழைக்காய் மற்றும் வாழைப்பூ நறுக்கும் போது கரையாகும். இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கரை ஏற்படாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...