Thursday, October 22, 2020

இவர்கள் போல அனைவரும் இருந்தால் இந்து மதம் மேலும் வலிமை பெரும்!

 இது தாண்டா பிராமணன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலீத் சமுதாய தலைவர்களை தரையில் உட்காரவைத்து ஜனநாயகம் பேசும் திமுக, திக, விசி மற்றும் எடுபிடுகள் கவனத்திற்கு.

கீழேயுள்ள படத்தில் இருப்பவர் சாமிநாத குருக்கள் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - ஹரிஜன ஆலய ப்ரவேசத்தின்போது - அதை ஆதரித்து - ஹரிஜன மக்கள் வந்துபோனபின் - சுத்தம் சாந்தி ஹோமம் என எதுவும் செய்யாமல் - அவர்களும் பக்தர்களே என சொல்லி தீண்டாமையை காலில் போட்டு மிதித்த பகுத்தறிவாளர்.
இந்த செயலுக்காக அவர் சார்ந்த சமூகத்தின் மூலமாகவே அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அவரை அடித்தார்கள், மாட்டு சாணத்தை கரைத்து மேலே ஊற்றினார்கள் - அவர் குடும்பத்தையே சமூகத்திலிருந்து தள்ளிவைத்தார்கள்.
ஒரு நாள் கஷ்டம் தாங்க முடியாம அவரது மகன் அவரிடம் - "ஏம்பா, மத்தவங்க மாதிரி நீயும் இருந்திருக்கலாமேன்னு கேட்டாராம்.
அதுக்கு அவர், ஹரிஜனும் பக்தன்தானே. அவர்கள் உள்ளே வந்து வழிபடுவது எனக்குத் தப்பாத் தெரியலைன்னு" சொன்னாராம்.
இவரின் இந்த குணத்தை பாராட்ட - அப்போதைய கவர்னர் ராஜாஜி இவரின் வீட்டுக்கு சென்றாராம் - இவரின் குடும்பத்தார் - ராஜாஜியிடம் உன்னுடைய மகன்களுக்கு வேலை வாங்கித்தரும்படி கேள் என்றனராம் - அதற்கு அவர் "என் மகன்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைத்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம்"
இதை இப்பொழுது பதிவிடும் நோக்கம் - ப்ராமணர்களிலும் தீண்டாமையை வெகு தீவிரமாக எதிர்த்தவர்கள் உண்டு எங்கள் குடும்பம் உட்பட - சிலரது தவறுக்கு மொத்த சமூகமும் பொறுப்பேற்க முடியாது - அப்படி பொறுப்பேற்க வேண்டுமானால் - அனைத்து மதங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கு செய்தவர் உண்டு
Image may contain: 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...