Saturday, October 17, 2020

அரசாங்க ஊழியர்கள் தங்கள் உரிமைகளை மட்டுமே பேசுகிறார்கள். கடமையும் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். இதை விளக்குவதுதான் இந்த சிறுகதை.

 ஒரு ஊரில் திரிஷா நகர், காஜல் நகர் என இரு ஏரியா.

திரிஷா நகரில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஒருவர் கடை ஆரம்பித்தார். காலை 6.00 மணிக்கு மனைவி கடையை திறந்து விடுவார். பால் பாக்கெட் வியபாரம் நடக்கும். அதற்குள் மார்கெட் சென்று கணவன் காய்கறி வாங்கி வந்து விற்க்க ஆரம்பிக்க மனைவி சமைத்து வர போவார். மனைவி பின் மதியம் கடையை பார்க்க சிறிது ஓய்வுக்கு பின் கணவன் வர மனைவி ஓய்விற்கு செல்ல....மாலை கணவன் மனைவி இருவரும் இணைந்து வியாபாரத்தை கவனிக்க...சுறுசுறுப்பும் நேர்மையும் பணிவும் வியாபாரத்தில் வெற்றியை தந்தது. பிழைக்க வந்த ஊரிலே நாலு வீடு வாங்கினர். இருப்பினும் தொழில் அதே போலவே.....
இது கற்பனை கதை அல்ல. உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த கதை தான். பார்த்த நபர்கள் தான்.
சரி காஜல் நகருக்கு வருவோம். அங்கே மளிகை கடை கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய அரசு மளிகை கடை ஆரம்பித்தது.
இரு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். யூனியன் சொன்னது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை. ஒரு மணி நேரம் ஓய்வு.
எனவே கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. மற்றொரு நபர் மார்கெட் சென்று காய்கறி வாங்க போவார். அதிகாலையில் வித்தது போக மீதி காய்ந்த காய்கறிகள் கடைக்கு 1 மணிக்கு வரும். 1மணி முதல் 2 மணி வரை லஞ்சு இடைவேளை.
அதற்குள் ஏரியா பெண்கள் குழம்பு வைத்து பசி ஆறி இருப்பர். வியாபாரம் நடக்குதோ இல்லையோ 6 மணிக்கு கடையை பூட்டி விட்டு கிளம்பி விடுவார்கள்.
இதில் பணம் வாங்க என பெண் பணியாளர் ஒருவரை அரசு நியமித்தது. கடையை யார் கூட்டுவது என்பது சன்டையாகி யூனியன் மூலம் சமாதானமாகி துப்புரவு தொழிலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இப்போது நான்கு ஊழியர்கள். கடைக்கு வந்த பெண்ணை எடை போடுபவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் HRA வீட்டு அலவன்ஸ் அரசு தந்தது. ஒரே வீட்டில் இருவரும் இருந்தனர். பெண் பணியாளருக்கு குழந்தை பிறந்ததால் 9 மாதம் விடுப்பு அரசு தந்தது. இதற்கு மாற்றாக வரும நபர் மாலை மட்டுமே வருவதால் 9 மாதங்களும் மாலை மட்டுமே வியாபாரம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது..
திரிஷா நகர் , காஜல் நகருக்கு அருகே இருந்ததால் காஜல் நகர மக்கள் அங்கே சென்று காய்கறி மளிகை சாமான்களை வாங்கிக்கொண்டனர்.
அரசுமளிகை கடை பெரும் நட்டம் சம்பாதிததது. சம்பளம் தரமுடியவில்லை. மூடலாம் என முடிவெடுத்த போது அந்த அரசு மளிகைகடை ஊழியர்கள் சொன்னார்கள். "நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம். கடையை மூடக்கூடாது"
புரிந்ததா..பொதுத்துறை தனியார் துறை வித்தியாசம். அவ்வளவு தான்.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...