Thursday, July 22, 2021

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

 வெள்ளி முதல் வியாழன் வரை (23.7.2021- 29.7.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சந்திரன், புதன். குரு சாதக நிலையில் உள்ளனர். முருகர் வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: பயணங்களால் நன்மை உண்டு. வருமானம் பெருகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் மெல்ல வெளிச்சம் வரும்.

பரணி: அதிரடி திட்டங்கள் தீட்டுவீர்கள். தைரியம் கூடும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். புதிய வாய்ப்பு கிடைக்கும். நன்மை தரும் பேச்சால் மற்றவரை மகிழ்விப்பீர்கள்.

கார்த்திகை1ம் பாதம்: குடும்பத்தினரின் நெருக்கம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய கவலை தீரும். பணிச்சுமை குறைய வாய்ப்புண்டு. பெண்களின் முயற்சிகள் வெற்றியடையும்.


ரிஷபம்


புதன், சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டு. விநாயகர் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கார்த்திகை 2,3,4: தடைகள் நீங்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் கூடும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

ரோகிணி: முயற்சிகள் கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வார இறுதியில் மகிழ்ச்சியில் துள்ளுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பணிச்சுமை நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: பொருட்களின் சேர்க்கையால் மனதில் மகிழ்ச்சி கூடும். வெளிநாடு செல்லும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகள் மேற்கொள்வர்.


மிதுனம்


ராகு, கேது, புதனால் நன்மை காண்பீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

மிருகசீரிடம் 3,4: சுபவிஷயத்தில் விருப்பம் கைகூடும். கவலை தீரும். வெற்றி பெற முயற்சியை அதிகரிக்க வேண்டி வரும். நண்பர்கள், சிநேகிதிகளின் பிரச்னை தீர விடாமுயற்சி எடுப்பீர்கள்

திருவாதிரை: பணியில் அதிக கவனம் தேவைப்படும்.. வழக்குகளில் தீர்வு தாமதமாகும். வியாபாரிகள் தடைக்குப்பின் நன்மை அடைவர். பொறாமை காரணமாக பிரச்னை உண்டாகலாம்.

புனர்பூசம்1,2,3: சில விஷயங்களில் திட்டமிட்ட விஷயம் ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் கைமாற்று வாங்கும் நிலை உருவாகும். நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சந்திராஷ்டமம்: 23.7.2021 இரவு 8:45 மணி - 25.7.2021 இரவு 1:21 மணி


கடகம்


சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். சிவன் வழிபாடு சிரமம் நீக்கும்.

புனர்பூசம்4: நீங்கள் விரும்பாமலேயே முயற்சிகளைத் தள்ளிப்போட வேண்டியிருக்கும். பொறுமையைக் கைவிடாதீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

பூசம்: வெளியூரில் மகன்/ மகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து லாபம் காண்பீ்ர்கள். நீண்ட காலமாக உள்ள தடைகள் விலகி வாய்ப்பு கிடைக்கும்.

ஆயில்யம்: மற்றவர்களை அனுசரித்துப் போக வேண்டும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் எரிச்சல் அடையலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அதிகாரிகளுடன் மோதல் வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 25.7.2021 இரவு 1:22 மணி - 28.7.2021 காலை 8:12 மணி


சிம்மம்


குரு, சனி, ராகு, அதிர்ஷ்ட பலன்களை தருவர். ராமர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


latest tamil news



மகம்: அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கடுமையான சொற்களைத் தவிர்க்க வேண்டும். பயனடைந்தவர்கள் நன்றி பாராட்டுவார்கள். அதனால் நன்மை வரும். மாணவர்களுக்கு வாகன வசதி பெருகும்.

பூரம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொறுமையின்மை காரணமாக சிலர் தவறு செய்ய நேர்ந்தாலும் வருந்த வேண்டாம். பிரபலமான ஒருவர் அறிமுகமாவார். பெண்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டுப் பாராட்டு காண்பர்.

உத்திரம்1: முயற்சிகளில் தாமதம் ஏற்படும். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் விஷயங்கள் நடைபெறாமல் பதற்றம் ஏற்படலாம்.

சந்திராஷ்டமம்: 28.7.2021 காலை 8:13 மணி - 30.7.2021 மாலை 5:34 மணி


கன்னி


சந்திரன், புதன், சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர். குரு வழிபாடு வளம் தரும்.

உத்திரம்2,3,4: செல்வாக்கு, அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்த எண்ணம் நிறைவேறும். வேற்று மதத்தவர்களால் நன்மை ஏற்படும். வியாபாரிகளும் பணியாளர்களும் வழக்கத்தைவிட அதிகமாக உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும்.

அஸ்தம்: வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். மேலதிகாரி உங்களை மதித்து ஆலோசனை கேட்கக் கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பெண்களின் முயற்சிகள் நிறைவேறும்.

சித்திரை 1,2: பணியாளர்கள் மேலதிகாரியின் எண்ணத்தை நிறைவேற்ற அதிக நேரம் உழைக்க நேரிடும். வியாபாரத்தில் நவீனத்தை புகுத்தி லாபம் ஈட்டுவீர்கள். எண்ணம், கொள்கைகளை மாற்றும் நிலை உருவாகும்.


துலாம்


சூரியன், புதன், சுக்கிரன் கூடுதல் நன்மை தருவர். விநாயகர் வழிபாடு வளம் தரும்.

சித்திரை 3,4: முக்கிய முடிவுகள் எடுக்க குடும்பத்தினர் உதவுவர். சந்தோஷம் நிலைக்கும். புதிய நட்பால் பிரச்னை ஏற்படலாம் கவனம். சக ஊழியர்களின் உதவி கைகொடுக்கும்.

சுவாதி: பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பணியிடத்தில் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள்.

விசாகம்1,2,3: வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். ஆரோக்யம் பற்றிய பயம் வேண்டாம். அதிரடி மாற்றம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்


விருச்சிகம்


செவ்வாய், சுக்கிரன், சந்திரன், புதன் நன்மை தருவர். குருவாயூரப்பன் வழிபாடு நல்லது.

விசாகம்4: நட்பு விரிவடையும். மகிழ்ச்சியளிக்கும் மாற்றம் ஏற்படும். நல்லவர்கள் உதவுவர். சருமப் பாதுகாப்பை அவசியம் பேணுங்கள். பேச்சினால் நன்மை காண்பீர்கள். தாயாருக்கு நன்மை உண்டு

அனுஷம்: கணவர் அல்லது மனைவியின் முயற்சி வெற்றி பெறும். குழந்தைகளால் நன்மை காண்பீர்கள். தாமதித்த நல்ல விஷயம் ஒன்று நடக்கும்.

கேட்டை: பிரச்னை தீரும். வெளிநாட்டு முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.


தனுசு


சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன் வழங்குவர். குரு வழிபாடு நலம் தரும்.

மூலம்: கோபத்தால் பிறரை அச்சுறுத்துவீர்கள். வியாபாரத்தில் பிரச்னை தீரும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். பணியில் போராட வேண்டியிருக்கும்..

பூராடம்: அரசாங்க உதவிகளை எதிர்பார்ப்பதற்கில்லை. பெண்களின் மனதில் சங்கடம் ஏற்படும். கலைஞர்கள் சலிப்படையக்கூடும். வீண் செலவு செய்யாதிருப்பது நல்லது.

உத்திராடம்1: உடல்நிலை பற்றிய பயம் வந்து நீங்கும். கடுமையான உழைப்பால் களைப்படைய நேரிடும். பூர்வீக சொத்து பற்றிய வழக்கில் இழுபறி நீடிக்கும். பேச்சில் கவனம் தேவை. பணிச்சுமை ஏற்படும்.


மகரம்


குரு, கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். அனுமன் வழிபாடு அல்லல் போக்கும்.

உத்திராடம் 2,3,4: திறமை வெளிப்படும். ஆனால் அதற்கான சம்பளம், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். தொழிலில் லாபம் சீராக இருக்கும்.

திருவோணம்: அலைச்சல் ஏற்படலாம். புதிய விஷயம் கற்பதில் ஆர்வம் கூடும். தந்தையின் உடல்நலக்குறைவு சீராகும்.

அவிட்டம் 1,2: முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு இனிமையான தகவல் வரும். சற்றும் எதிர்பார்க்காத துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.. சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு முடிவுக்கு வரும்.


கும்பம்


புதன், சந்திரன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். ராமர் வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம் 3,4: குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வீர்கள். தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. பேச்சினால் நன்மை விளையும். மகன் அல்லது மகளுடன் இருந்த பிணக்கு தீரும்.

சதயம்: வீண் அலைச்சல் ஏற்படும். தொழிலில் அதிக முயற்சி தேவை. பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

பூரட்டாதி 1,2,3: கடந்த கால முயற்சிக்கான பலன் கிடைக்கும். பணியாளர்கள் வேலையில் நிம்மதி காண்பர். திறமை வெளிப்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.


மீனம்


புதன், சுக்கிரன், சனி அதிர்ஷ்ட பலன் வழங்குவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு வினை தீர்க்கும்.

பூரட்டாதி 4: சுபவிஷய பேச்சு நடக்கும். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு மறையும். பிரச்னையைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். பெண்கள் தொல்லைக்கு ஆளாகலாம்.

உத்திரட்டாதி: இனிமையான விஷயம் நடந்தேறும். பணியாளர்களுக்கு வேலைப்பளு உண்டாகும். பெண்கள் திறமை காரணமாக நற்பெயர் காண்பர். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். புத்துணர்ச்சி பெருகும்.

ரேவதி: பணப் பற்றாக்குறை தீரும். நண்பர்களுடன் ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...