Wednesday, July 28, 2021

மழைநீர் அறுவடை........

 உங்களுக்கு கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை எனில்..

நீங்கள் உங்களது பூமியை சுற்றி இப்படி குழி எடுத்து விடுங்கள்.
கண்டிப்பாக மழைநீர் அறுவடை செய்து பூமியில் இறங்கி நீர் மேலே வரும்.
இந்தப் படம் சுத்தமாக குடிக்ககூட நீர் இல்லை என்று பீகாரில் உள்ள கயா மாவட்டத்தில் இப்படி ஊர் மூழுவதும் 1650குழியை தோண்டினார்கள்.
என்ன ஆச்சரியம் தற்போது அங்கே 17வது அடியில் இனிப்பானமழை நீர் பூமியில் கிடைக்கிறது.
இந்த குழிகள் உப்புநீரின் தன்மையைக்கூட மாற்றம் செய்யக் கூடியது என்றே தோன்றுகிறது.
பல்லடம்,திருப்பூர், தாராபுரம், பொங்கலூர், தர்மபுரி, சேலம், மதுரை, ராம்நாடு, வேலூர், அன்னூர், புளியம்பட்டி, சேவூர் போன்ற பகுதியிலும்,,
நொய்யல்,காவிரி தென்பென்னை பாலாறு போன்ற ஆற்றுப் பகுதிகளில் இருபுறமும் இரண்டு ஐந்து கிலோ மீட்டருக்கு தொடர்ச்சியாக இந்ததிட்டத்தை அமல்படுத்தினால் நதிகளில் நீர் தானாக ஓடும்.
ஒவ்வொரு கிராமத்திலும் நூறுநாள் வேலை வாய்ப்பில் இருப்பர்களுக்கு இது போல் திட்டத்தை செயல்படுத்திட சொல்லலாம்.
ஒரு ஏக்கருக்கு ஐம்பது குழிகள் கட்டாயம் என்று நடைமுறைப் படுத்தலாம்.
ஆழமான குழியாக இல்லாமல்,
இறங்கி ஏறும் அளவுக்கு குழி இருக்க வேண்டும்.
குப்பை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
இப்படி இதன் விளைவுகளையும் அலச வேண்டும்..
நன்றி: நீர்த்துளி
May be an image of outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...