Wednesday, July 21, 2021

🌹 🌿 திருநீரு என்றால் ஈசனின் அடையாளம். அதைபற்றிய ஒரு விளக்கம் :

 

🌹 🌿 கோவிலுக்கு போனோம்; திருநீறு வாங்கினோம்; நெற்றியில் வைத்துக்
கொண்டோம்; என்பதுடன் முடிந்து விடவில்லை ஈசனின் வழிபாடு. ஆலயங்களில் வாங்கும் திருநீறு ஆண்டவ னின் பிரசாதம் ஆகும். திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போதும் அதை நெற்றியில் வைக்கும் போதும் கவனிக்க வேண்டியவை.
🌹 🌿 1. திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்.
🌹 🌿 2.நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்.
🌹 🌿 3.திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும்.
4.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது.
🌹 🌿 திருநீறு நெற்றியில் இடும் போது கவனிக்கவேண்டியது
திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும். மூன்று கோடுகள் எதற்கு?
🌹 🌿 இந்த மூன்று கோடு கள் ஈசனின் தொழிலான 1.ஆக்கல் 2 .காத்தல் 3அழித்தல் என்பதைக் குறிக்கிறது.
🌹 🌿 1.கிழக்கு ,வடக்கு திசை களில் நின்றாவாறே திருநீறு நெற்றியில் வேண்டும்.
🌹 🌿 2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய"
"ஒம் சிவாய நம" என்று உச்சரித்தல் நல்லது.
🌹 🌿 3. திருநீறு என்றால் செல்வம் என்பதுபொருள். அப்படி யெனில் செல்வம் நம்முடனி ருக்க திருநீறு இடுவோம்..
🌹 🌿 திருநீற்றினை நெற்றியில் இட்டுக்கொண்டு இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.
🌹 🌿 இதனால் கிடைக்கும் நன்மைகள்:
🌹 🌿 1. சிவனருள்
🌹 🌿 2. மன அமைதி
🌹 🌿 3. நெற்றியின் புருவ மத்தியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தீருநீறு ,குங்குமம் வைக்கும் போது இந்த ஹிப்டானிசம் செய்வினைகள் எல்லாம் தவிர்க்கப்படுகிறது.
🌹 🌿 4. திருநீறு நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது
🌹 🌿 5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருஷ்டியில் இருந்து விலக்கு.
🌹🌿ஆகையால் அன்பர்களே ஈசனை மனதார வணங்கி அவனது பிரசாதமாகிய திருநீறை நெற்றி நிறைய வைத்து அவனது அருளைப் பெறுவோம்.
🌹 🌿 ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.

🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...