Thursday, July 22, 2021

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில், வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது...

 வாழ்க்கை என்றால் ஆயிரம் வலிகளும், வேதனைகளும், துன்பங்களும் இருக்கத்தான் செய்யும்... வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால், இவற்றை எல்லாம் கடந்தால்தான் சிகரங்களை அடைய முடியும்...

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில், வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது...
பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் தான்...
வலி வந்தபோது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம்... வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள்... வலிகளால் நிரப்பப் பட்டதுதான் இந்த வாழ்க்கை...
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போதுதான் அழகான உடற் கட்டைப் பெற முடிகிறது...
இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்...
வலி பொறுக்க முடிய வில்லை என்றால் நீங்கள் முன்னேறவில்லை என்று அர்த்தம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...