Wednesday, July 21, 2021

பெட்ரோல் பங்கில் வித விதமாக திருடுகிறார்கள் நாம் விழிப்பாக இருந்தால் திருட்டை தடுக்க முடியும்.

 *நண்பர்களே இனிமேல் பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் டீசல் நிரப்பும் போது ரூ100 ரூ50 என்று பணம் மதிப்பில் பெட்ரோல் பிடிக்காதீர்கள்

*அவ்வாறு நீங்கள் பிடிக்கையில் அதில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் திருடப்படுகிறது.*
*நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் எனது இரு சக்கர வாகனத்திற்கு ரூ200 க்கு பெட்ரோல் பிடித்தேன் .*
*பெட்ரோல் போடும்போது, எனது வண்டியின் பெட்ரோல் டேங்கிற்குள் பெட்ரோல் பிடிக்கும் குழாயை செலுத்தாமல் மேலே தூக்கி பிடித்து ( அதாவது பெட்ரோல் விழுவதை எனது கண் பார்வையில் படும்படி பெட்ரோல் பிடிக்க அந்த ஊழியரிடம் நான் கூறினேன்
*அவர் தயங்கிக் கொண்டு நான் கூறியவாறு செய்தார். சரியாக ரூ180 அளவு வரை பெட்ரோல் விழுந்தது. பின்பு இயந்திரத்தில் பண அளவு மட்டும் ஓடியது ஆனால் பெட்ரோல் விழவில்லை . சரியாக ரூ195 அளவில் சிறு பெட்ரோல் விழுந்து ரூ200 ல் பெட்ரோல் விழுவது நின்று விட்டது.*
*இது பற்றி நிர்வாகத்திடம் கேட்டபோது, இது ஒரு ஆட்டோமேட்டிக் இயந்திரத்திரம் அப்படிதான் விழும் என்று திமிராக தெனாவட்டாக கூறினர்.*
*பின்பு நான் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு 1800224344 என்ற எண்ணில் புகார் செய்தேன் உடனே உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நிர்வாகத்தை கண்டித்ததோடு இனிமேல் இது போன்று தவறு நடந்தால் நடவடிக்கை பாயும் என்று கூறி அவர்களை எச்சரித்து சென்றார்
*மேலும், அந்த அதிகாரி இனி பெட்ரோல் பிடிக்கையில் ரூ100 ரூ200 என்று பணம் அளவில் பெட்ரோல் வாங்காமல் லிட்டர் அளவில் மட்டும் பெட்ரோல் வாங்க அறிவுரை கூறினார்.*
*பண அளவில் பெட்ரோல் வாங்கும்போது, அதிக பங்குகள் திருடுவதை ஒப்புக் கொண்டார். லிட்டர் அளவில் பெட்ரோல் வாங்கும்போது 99% திருடு நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.*
*எனவே, இப்பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவரும் இனிமேல் பெட்ரோல் பிடிக்கும்போது லிட்டர் அளவில் மட்டும் பிடிக்கவும்*.
*நீங்கள் லிட்டர் பிடிக்கும் போது லிட்டர் விலை ரூ78 என இருந்தால் சில்லரை வசதிக்காக ரூ80 க்கு பிடிக்கட்டுமா என்று கேட்டாலும் உடனடியாக வேண்டாம் என்று கூறி மறுத்து விடுங்கள்
*ரூ80 க்கு பெட்ரோல் பிடித்தால் ரூ73 அளவில்தான் பெட்ரோல் விழும். தற்போது அனைவரிடமும் வங்கி ஏடிஎம் கார்டு உள்ளது அந்த. கார்டினை நாம் பயன்படுத்தி பெட்ரோல் பிடித்தால் சில்லறை பிரச்சனை வராது.*
*கண்டிப்பாக ஏடிஎம் கார்டு மூலமாக மாதத்திற்கு ஒருமுறை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என விதி உள்ளது அது இது மூலமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்
*எனவே, மேற்கூறிய பதிவைத் தவறாமல் அதிக அளவில் பகிர்ந்து நாமும் கடைபிடித்து ஊழல் அரக்கர்களை திருட்டு நாய்களை விரட்டுங்கள் முடிந்தவரை இந்த பதிவினை எல்லோருக்கும் தெரியும்படி பகிருங்கள் நண்பர்களே.
May be an image of car

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...