Tuesday, July 20, 2021

*நான்... நான்... நான்...*

 #எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

#எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
#எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
#மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
#மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
#நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.
💐நோய் என்று எதுவும் இல்லை.💐
💐இயலாமை என்று எதுவுமில்லை💐
#எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
#சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
#நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
*நான்... நான்... நான்...*
*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.
*நான்* பெரியவன்,
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளுகிறோம்
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??
*நான்*தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருப்போம்.
*உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*
நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.
நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...