அஇஅதிமுக என்ற இயக்கம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி. மோடி பிரதமரானபின் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததிலிருந்தே (செல்வி ஜெயலலிதா மறைவுக்குப்பின்) அதிமுக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் ஒருபுறம். கட்சிக்குள்ளிருந்தும் (அதிமுக) எதிர்ப்புக்குரல் அவ்வப்போது எழுகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, July 28, 2021
அதிமுக என்ற மாபெரும் இயக்கம் பிஜேபிக்கு அடிமையா?
மத்திய பாஜக தலைமையின் சில நடவடிக்கைகளும் நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜகவின் தமிழக தலைவர் திரு. அண்ணாமலை, `திமுகவுக்கும், பாஜகாவுக்கும் தான் மோதல்’ என்பது போல் பேசி வருகிறார். கூட்டணியில் அதிமுக இருப்பதை அவர் குறிப்பிடாவிட்டாலும், அஇஅதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். போலீஸ் அதிகாரியாக இருந்தவருக்கு தெரியாத அரசியலா?
சசிகலா முதலில் ஒதுங்கியிருந்தார். திடீரென `அஇஅதிமுகவை கைப்பற்றுவேன்’ என்று கூறுகிறார். அப்படி சொல்வதற்கு தைரியம் எங்கிருந்து வந்தது? சுப்பிரமணிய சாமியுடன் இருக்கும் (முன்னாள் கலெக்டர்) சந்திரலேகா, சசிகலாவை ஆதரித்து ஜெயா டிவியில் பேட்டி அளிக்கிறார். பாஜகவின் பின்பலம் இல்லாமல் இது நடக்குமா? இது போன்ற `ஊமை குசும்பு’ வேலைகளை பாஜக நிறுத்திக் கொள்ளாவிட்டால், அது தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வளரவே முடியாது.
மன்னர்கள் காலத்தில், நாடு பிடிக்கும் வேலை நடந்தது போல மத்திய பாஜக, காங்கிரஸை விட மோசமாக மாநிலங்களை பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. இந்த `தில்லாலங்கடி’ வேலைக்கு மம்தா பானர்ஜி குட்டு வைத்தார். இதுபோன்ற உள்குத்து வேலைகளை செய்வதை நிறுத்திவிட்டு, நாட்டிற்கு நல்ல செயல் திட்டங்களை வகுத்து மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே பா.ஜ.க.வை, அரசினை மக்கள் விரும்புவார்கள். இல்லையென்றால் காங்கிரஸ் போல் தேய வேண்டியதுதான்.
From August 2021 Ithayakkani editorial
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...


No comments:
Post a Comment