Monday, April 4, 2011

திருச்சி:அமைச்சரின் உறவினரிடம் ரூ.5.5 ‌கோடி பணம் சிக்கியது

திருச்சியில் அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக ரூ.1000 கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி பொன்நகரில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உறவினருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் மாவட்ட ஆர்.டி.ஓ. சங்கீதா தலைமையில் போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் நடத்திய அதிரடி சோதனையில் 5 பைகள் சிக்கின. இந்த பைகளை பிரித்து பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ. 1000 , 500 கரன்சி நோட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தினை மதி்ப்பு ரூ. 5 கோடியே, 5 லட்சத்து 27 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்தும் ,மொத்த தொகை எவ்வளவு என்பன குறித்தும் விசா‌ரணை தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் உதயகுமாரின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


பேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர்

காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். "என்னடா கனகவேல் எப்படியிருக்க...' எனக் கேட்ட காமராஜர். "நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் அந்த இளைஞர்.அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர். அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, "மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.
"என் பேரை எதுக்கு எழுதினே...' காமராஜரின் குரலில் கோபம் இருந்தது. "இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் அந்த இளைஞர்.உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து, " கனகவேலு... இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே.
"இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது' என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர், காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்.இதெல்லாம் அந்த காலம்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...