Tuesday, April 26, 2011

தமிழ்பெண்கள் கற்பழிப்பு - கைதிகள் சுட்டுக்கொலை; ஐ.நா., விசாரணைக்குழு அதிர்ச்சி ரிப்போர்ட்

இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒருமாத காலத்தில் போராட்டத்திற்கு தொடர்பு இல்லாத 10 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்களை குண்டு போட்டு கொன்றுள்ளது என்றும், சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர் என்றும் ஐ.நா., சபை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப் போர் நடந்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஐ.நா., சபை ஒரு குழு அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் பெருமளவில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களால் இலங்கை அரசு பல ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொலை செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அதே நேரத்தில் புலிகள் பொதுமக்களை , மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது.

ஆஸ்பத்திரிகள், ஐநா மையங்கள் மற்றும் சர்வதேச உதவிக் குழுவான செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உதவிக் கப்பல் ஆகியவற்றின் மீது இலங்கை அரசுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஏபி செய்தி நிறுவனத்தை ஆதாராமாக மேற்கோளிட்டு ஐநா காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இலங்கையில் ஐ.நா., அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதில் இலங்கை அலட்சியமாக இருந்ததும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கைதிகளை சுட்டுக்கொன்ற கொடூரம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அவர்களின் தலைகள் மீது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்ஈழ புலிகள் சுமார் 3,லட்சத்திற்கும் 30 மேற்பட்ட பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் .


ஐநா சபை விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என இலங்கை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானால் மறுசீரமைப்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்நாடு கூறியிருந்தது. இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஐநா ஏற்க மறுத்து விட்டது.


இந்த அறிக்கை தவறானது என்றும் முறைகேடானது என்றும் இலங்கை அரசு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கு எல்லோரும் ராஜபக்சேவை குறை கூறுகின்றார்கள். அவன் இனம் வேறு நம் இனம் வேறு. (சிங்களவர்களை பொறுத்தவரை அவன் உன்னத தலைவன்.அவன் அவனுடையஇனத்தை காத்த தலைவன் நம்மை பொறுத்தவரை அவன் ஒரு பிணம் தின்னும் கழுகு.) நம் இனத்தை காக்க நமக்குதான் உன்னத தலைவன் இல்லாமல் போயிற்றே. நம் இனம் அழிகின்றதே என நாம் என்ன செய்தோம். நம்மால் முடியவில்லை ஏனென்றால் நம்மிடம் எந்த பதவியும், எந்த பலமும் இல்லை. ஆனால் பதவி, பலம், இருந்தும் சில கயவர்கள் தமிழன், தமிழன் என்றே சொல்லி, சொல்லி நம் கருவை அழித்த அந்த பெரிய மனிதரை எந்த பட்டியலில் சேர்ப்பது. அந்த ஆளையும் தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்ற மனிதர்கள் தான் நாம் என்பதை யாரும் மறந்து விடவேண்டாம். இன்னமும் பல முத்துகுமரன்கள் மரித்தாலும் நமக்கு சூடு, சொரணை எல்லாம் வராது. ஏனென்றால் நாம் தான் முழுமையான மாயை இல் மூழ்கி கிடக்கின்றோமே. மது, கேளிக்கை,இலவசம் இது போதும் நமக்கு. பின் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன? இனியாவது இந்த அற்ப மாயைலிருந்து விடுபட்டு நம் இனம் காக்க ஒன்று பட்டு விழித்து எழு. இப்பவும் நீ விழித்து கொள்ள வில்லை என்றால் நாளைய இளைய தலைமுறைக்கு நம் இனம் இலங்கையில் இருந்த சுவடே தெரியாமல் போகும் பொழுது ஏச்சிகும், பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதை மறக்கவேண்டாம் .நம் மனதில் இந்த தாகம் கொழுந்து விட்டு எறிந்தால் தான் நம்முடைய உடன் பிறவா மிச்சம் மீதி உள்ள சகோதர, சகோதரிகளை காக்க இயலும். இந்த விஷயத்தில் மாநில, மத்திய அரசுகள் ஒன்றும் செய்யாது. ஏனென்றால் 500 க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் (தமிழக மீனவர்கள் ) கொலை சிங்கள அரசால் செய்யப்படும் பொழுது கேட்காத அரசுகள் அடுத்த நாட்டில் வாழும் இலங்கை பிரஜை களுக்காக,அடுத்த நாட்டின் பிரச்சினையை எப்படி கேட்கும்.ஆதலால் நாம் தான் அவர்களுக்கு இதை உணர்த்த வேண்டும். இனியும் நான் தமிழன் என்று கூறும் கயவர்களை நம்ப வேண்டாம். அவர்களுக்கு அவர்களுடைய மக்கள் நலம் ஒன்றே போதுமே. விழித்து கொள் தமிழா! நல்ல விடியலை நோக்கி!!!! நாளைய தமிழகம்????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...