Monday, April 18, 2011

கருணாநிதி குடும்பத்தின் புதிய தொழில், தமிழகத்தை கலக்க போகுது..!

கலைஞர் வாரிசுகள் க்மொத்தம் 75 பேர்னு நினைக்கிறேன்..இவங்க எல்லோரும் ஆளுக்கு ஒரு தொழில் செஞ்சிகிட்டிருந்தாலும் ,கலைஞர் கையில் ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் எல்லோரும் ஒண்ணு கூடிருவாங்க...மொத்த கொள்முதல் தொழில் முதல்,இவர்கள் செய்யும் குறிப்பிட்ட உற்பத்தி பொருளையே மார்க்கெட்டில் கொள்முதல் செய்யும் படி பெரும் வியாபாரிகள் நிர்பந்திக்கப்படுவார்கள்...அல்லது பிரபல கம்பெனிகளின் நிறுவங்கலை தாமே எடுத்துக்கொள்வார்கள்..இது போன்று சின்ன சின்ன பிஸினஸ் ஆயிரக்கணக்கில் ஸ்டாலின் வசம் இருப்பதாக சொல்வார்கள்.


இந்த ஐந்தாண்டுகால்கமும் இது போல சின்ன சின்ன தொழில் செய்வது போரடிக்க..இவர்களின் தொழில் பிரம்மாண்டமாக மாறி தமிழ்நாட்டின் மொத்த தியேட்டர்களையும் குத்தகைக்கு எடுத்தல்..ஆம்...தியேட்டர் முழுக்க இவர்கள் கட்டுப்பாட்டில் சென்ற பின் இவர்கள் எடுக்கும் படங்கள் மட்டுமே முக்கிய பணிகை தினங்களில்..அதாவது ஒரு வார கலெக்சனே போட்ட காசை கொடுத்துரும் எனும் பிரீமியம் டைமில் வெளியிடுகிறார்கள்..இதில் தான் காவலன் விஜய் முடக்கப்பட்டார்..எங்கள் படம் வருது..அதனால் உன் படத்தை ஒரு மாசம் கழிச்சு விடு என நிறுத்தி வைத்தார்கள்....

பொங்கல் தினத்தில் என் படம் வந்தே ஆகணும் என விஜய் என்னும் முக்கிய நடிகரே கெஞ்சியும் நடக்கலைன்னா பிரச்சனை எப்படின்னு பாருங்க...மாட்டு பொங்கல் அன்னிக்குத்தான் படம் ரிலீஸ் ஆச்சு..அந்த காவியத்தை பொங்கல் அன்னிக்கு பார்க்க முடியலைன்னு ஒரு ரசிகன் தீக்குளிச்சது அந்த படத்தை விட கொடுமை...

இது எப்படி போகும்னா தீபாவளிக்கு விஜய்,அஜித்,ரஜினி,கமல் படங்கள் கலைஞர் குடும்ப தயாரிப்பில் நடிச்சிருந்தா படம் வெளிவரும்..வானளாவ அவர்கள் மீடியாவால் புகழப்படுவார்கள்..இல்லைன்னா தீபாவளி ரிலீஸில் கலைஞர் பேரன் படத்துக்கு வசூல் பாதிக்கும்னா ரஜினியே ஆனாலும் ஒரு மாசம் கழிச்சு ரிலீஸ் பண்ணத்தான் அனுமதி...தீபாவளிக்கு கிடையாது என்ற நிலை உண்டாகும்.....

இதை நோக்கித்தான் இன்று தமிழ் சினிமா போய் கொண்டிருக்கிறது.....இந்த துறை மட்டுமல்ல...பெரும்பாலான தொழில்கள் இது போன்ற மொத்த காண்ட்ராக்ட் அடிப்படையில் பெரிய முதலாளிகள் கைய்யை விட்டு போய்க்கொண்டிருக்கின்றன...இதனால் பெரும் ம்ஜுதலாளிகள்,சிறு முதலாளிகள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்..அ.தி.மு.க ஆட்சியில் சிறு கமிஸனோடு பிரச்சனை முடிஞ்சிரும்..ஆனா இது வெள்ளைக்காரன் நம்மை நம் நாட்டை எப்படி பிடிச்சானோ..அந்த கதையாக மாறுது.....


இப்போ...தமிழ்நாட்டுல ஒரு புது பிஸினஸ்ல இவங்க குடும்பம் இறங்க போகுது..தமிழகத்தில் உள்ள மொத்தம் 2800 அரிசி ஆலைகளையும் தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போகிறார்கள்..அதன் மூலம் தமிழகத்தில் மொத்த அரிசி விற்பனையும் இவர்கள் கண்ட்ரோலில் வரப்போகுது சாமியோவ்..

இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிப்பது நாட்டை காக்க அல்ல..தங்கள் தொழிலை காக்க...

ஏன்னா இந்திய அர்சியல் வரலாறுல ஒரு தேர்தல் அறிக்கையில தமிழக மந்திரிகள்....மக்களிடம் பிடுங்கி வைத்துள்ள நிலத்தை அவர்களிடம் பறிமுதல் செய்து மக்களிடம் சேர்ப்பேன்னு எந்த அர்சியல் கட்சியாவது அறிவிச்சிருக்கா..தில் தான் இருக்கா..? முதல்வர் ஆகும் முன்னே அதை தில்லா அறிவிச்சுது ஜெயலலிதாதான்...

ரிசல்டு முன்னியே இப்படின்னா முதல்வர் ஆனா..அந்த பயம் தான் தி.மு.க வை கழிய வைக்குது.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...