Tuesday, April 26, 2011

அரசியலுக்கு கெட்டிக்காரன்

ரெண்டு பொண்டாட்டிக்காரன்;அரசியலுக்கு கெட்டிக்காரன்

                   வாக்காளப் பெருமக்களே! சொகுசு பங்களா இல்லாத பரதேசி நான்! ரியல் எஸ்டேட் இல்லாத இளிச்ச வாயன்! ஒரு பவுன் தங்கம் கூட இல்லாத தரித்தரி! இதையெல்லாம் வாங்கணும்முன்னு ஆசைப்படற இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் மீது இரக்கப்பட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் என்னை எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்க உங்களை கெஞ்சி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
               தேர்ந்தெடுக்கப்பட்டால் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவேன்;காலடியிலேயே தவம் கிடப்பேன். கட்சி வேறுபாடுன்றி காலில் விழும் அவினாசி தொகுதி  வேட்பாளர் பாணியை இனி வருங்காலங்களில் கையாளலாம்.இது ஓட்டு கேட்க வரும் போது அனைத்து வேட்பாளர்களின் மனப்பாடம் செய்யப்பட்ட வாக்குறுதி! வாக்குறுதி!! வாக்குறுதி?

              ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ வாக இருந்தால் ஆடம்பரமாக வாழலாம்;அடித்து பிடித்து அமைச்சராகி விட்டால் ஐம்பது    தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம்.

                 ஜெயித்து விட்டால்  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், காலுக்கு அடியில் தவம் இருப்பார் எதாவது 'செட்டப் ' வீட்டில் தான்.இந்த ' கெட்டப் ' க்குத்தானே ஆளாய் பறப்பது! அதே தொகுதியில் நடக்கும் காது குத்து விழாவில் திடுப்பென தொன்றி ஒரு ஆயிரம் நோட்டை மொய் வந்து அனைவருக்கு ஒரே அடியாக காது குத்தல் நடத்தி விடுவார்.ஊருக்கெல்லாம் மொய்;உச்சரிப்பது பொய்.

                        இப்படி அரசியலில் ஆளாளுக்கு ஒரு துணையை எதற்கு தேட வேண்டும்? சேர்த்த சொத்தை பாதுகாக்க வேண்டும்; சேர்த்த துணைவிக்கு துணையாக சொந்தம் என்று வெறும் சொத்து மட்டும் இருக்க வேண்டும்.யாரோ! புண்ணியவான் கருணாநிதி, வீரபாண்டியார் சொத்துக்களில் இருந்து திருமங்கல பார்முலா போல திருமங்கள பார்முலாவை கண்டுபிடித்து விட்டான் போலும்.அது என்ன திரு ' மங்கள' பார்முலா?

                முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ 4.92 கோடி மட்டுமே! அவரை விட அவரது மனைவி தயாளு அம்மாளுக்கு சொத்து அதிகம் ரூ 15.45 கோடி.அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் ரூ 23.97 கோடி.

               பாவம்,வீரபாண்டியாரின் சொத்து மதிப்பு ரூ 75.18 லட்சம் தான். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ 93 லட்சம் தான்.ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து ரூ 2.25 கோடி.

       இந்த புள்ளி விபரங்கள் தான் பொன்முடி,துரைமுருகன்,பெரிய கருப்பன், பரிதி இளம் வழுதி, தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்களின் மனைவிகளை பாடாய் படுத்துகிறது.காரணம்,இந்த அமைச்சர்களின் மனைவிகள் அமைச்சர்களை விட அதிக சொத்துக்கள் வைத்துள்ளனர். இந்த அமைச்சர்கள் இன்னும் அதிக சொத்துக்கு ஆசைப்பட்டால் என்ன ஆகும்?பதில்...

                       தலைப்பை மீண்டும் படியுங்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...