Tuesday, April 26, 2011

கருணாநிதி விரக்தி..ஸ்டாலின்,அழகிரி செம குஷி

தேர்தல் ரிசல்ட் வர,இன்னும் நாட்கள் இருந்தாலும், இந்த கொடுமை ஆகாதுடா சாமி என இரு கட்சியினரும் புழுங்கி கொண்டிருக்கின்றனர்..அதுவும் கலைஞருக்கு இன்னும் சங்கடம்...நான் முதல்வர்...எனது ஆட்சியில் கொள்கை முடிவுகளை செயல்படுத்தக்கூட பைல் பார்க்ககூடாதா ..என தேர்தல் கமிசனிடம் சீறுகிறார் ..
தேர்தல் கமிசனோ ,கூலாக ..நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்..சும்மா இருங்க முதல்வரே என சொல்லிவிட்டது ....
 

இதற்கிடையில்,அரசு துறைகளை அவசரமாக மாற்றுகிறார்கள் ...முக்கிய பைகளை அவசரமாக அழிக்கிறார்கள் என ஜெயலலிதா தேர்தல் கமிசனருக்கு தந்தியடிக்க,கலைஞரோ அவதுறு வழக்கு  என பூச்சாண்டி காட்டுகிறார் ...இது என்னடா கொடுமையா இருக்கு...நான் சிவனேன்னு வீட்டோடையே கிடக்கேன் என அமைச்சர்கள் பலரும் வீட்டுக்குள்ளயே மட்டையாகி கிடக்கிறார்கள் ....

  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பெயரையும் சேர்க்கப்பட்ட பின்,இப்போது தி.மு.க விரக்தியின் உச்சத்திற்கே சென்றே விட்டது.. தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படாததற்கு
காரணம் அவர் கலைஞர் டிவி நிர்வாகம்,ஸ்பெக்ட்ரம் விசயத்தில் தலையீடு என எதுவும் எதுவும் இல்லை..என சி.பி.ஐ சொல்லியிருக்கிறது..
பத்தாம் பசலித்தனமான காரணமாக இருந்தாலும்...வயசான காலத்துல பாவம் அந்தம்மா தலைவருக்கு மனைவியான, தோஷத்துக்கு ஏன் கஷ்டப்படணும்னு விட்டுட்டாங்க..போல.

ஆனா ஒன்னு,,,கனிமொழி பெயர் குற்றப்பத்திரிக்கையில சேர்க்கப்பட்டதும் அண்ணன்கள் இருவருக்கும் செம குஷியாக இருந்திருக்கும்.எங்க நமக்கு போட்டியாக தமிழக அரசியலில் வந்துடுவோரோன்னு நினைச்சிருப்பாங்க ...அவங்களுக்கு சர்க்கரையா இருந்திருக்கும்..இனி அந்த வழக்கு போராட்டத்திற்கே கனிமொழிக்கு நேரம் சரியாக இருக்கும்....


கனிமொழிக்கு பதிலாக ,பலியாடாக கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் காவு கொடுக்கப்படலாம்.. என்கிறார்கள் ...பாவம் யார் பெத்த புள்ளையோ..


வரும் 27 ஆம்தேதி,தி.மு.க உயர்நிலை குழு கூடி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி முடிவு செய்யும் என்கிறார்கள்...அதிகபட்சம் என்ன செய்யமுடியும்..?ஒண்ணுமே பண்ண முடியாது ..தி.மு.க மந்திரி சபையிலிருந்து விலகினால் அது இன்னும் ஆபத்துதான்..இருக்கும் ஒரு பிடியும் போய் விடும்...வன்முறை வேண்டுமானால் செய்யலாம் அதுதான் இவர்களின் ஒரே பிரம்மாஸ்திரம்..


அது இவர்கள் ஆட்சியில் செய்யமாட்டார்கள் ...ஜெயலலிதா முதல்வர் ஆனால் செய்வார்கள் ...அதற்கு முன் டிரைலர் பார்க்க வாய்ப்பிருக்கு..சி.பி.,ஐ தன குற்றப்பத்திரிக்கையை வால்யூம் ௧ எனதான் சமர்ப்பித்து இருக்கிறது..இன்னும் பல வால்யூம்  வரலாம்..

ஆனா ஒண்னு..கலைஞர் தனது
வீட்டு குடும்ப பெண்களையும் அரசியலில் ஈடுபடவைத்து, அவர்களை ஊழலிலும் ஈடுபடவைத்துவிட்டார் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...