Tuesday, April 26, 2011

என் டைரி - கனிமொழி

சிபிஐயிடம் சிக்கிய என் டைரி - கனிமொழி


பெயர்: ஸ்பெக்ட்ரம் கனி

பழைய பெயர்: கவிஞர் கனிமொழி

பழையமுகவரி:

c/o ராசாத்தி
சிஐடி காலனி
சென்னை

 புதிய முகவரி:

c/o சிபிஐ
டெல்லி

தொழில்:டிவி தொடங்குவதற்காக கைமாத்தாக பணம் வாங்குவது

பிடித்த வசனம்:

1.ராசாத்திக்கு கனிமொழி மகள்;கனிமொழிக்கு நான் அப்பா - கருணாநிதி
 
2.கருணாநிதி பராசக்தி வசனம்
போகிறேன்...எதற்காக போகிறேன்? ஏன் கம்பி எண்ண போகிறேன்?

டிவிக்கு பணம் வாங்கியதை,வாங்கவில்லை தமாஷுக்குக் கூறினேன். லஞ்சம் வாங்காமல் இருப்பது காட்டுமிராண்டித்தனம் என்று காட்டமாகக் கூறினேன்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று இல்லை.

நிச்சயமாக இல்லை.ஊழல் செய்யதததை குறும்பாகக் குத்தி காட்டினேன்.

ஊழல் கூடாது என்பதற்காக அல்ல.ஊழல் செய்கிற குடும்பத்திற்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக.

ஸ்பெக்டரம் விற்றலை ஆதரித்தேன்.அது தீங்கு தரும் என்பதால் அல்ல.அது நல்லவர்களின்  தீர்த்த யாத்திரை தலமாக மாறி விடக்கூடாது எனபதற்காக.

விபரங்களை கேலி செய்தேன்.விபரங்கள் எனக்கு விரோதம் என்பதாலா? அல்ல! விபரங்கள்,சி.பி.ஐ நடத்தும் விசாரணையில் வினையாகி விடக்கூடாதே என்பதற்காக.

பிடித்த தோழர்: ராசா


பிடித்த ஆசை: திகார் ஜெயிலில் கவிதை எழுத வேண்டும்

எதிரி:அம்மாவின் பாசம்;நிரா நிராடியாவின் வேசம்

ரசித்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ சீக்கி அடிப்பது

சமீபத்திய சாதனை:குற்றப்பத்திரிக்கையில் குற்றச்சாட்டு

பிடித்த பாடல்: அண்ணன்  என்னடா...தம்பி என்னடா...அவசரமான உலகத்திலே

மிகவும் பிடித்தது : அண்ணமார் கதைகள்

சமீபத்திய எரிச்சல்: தயாளு அம்மாள் தப்பியது

சமீபத்திய ஆச்சரியம் :தலைவர் இன்னும் என்னை நம்புவது

கேட்க விரும்பு  கேள்வி:   இனியாவது திகார் ஜெயிலுக்கு  வருவீங்களா ,அப்பா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...