பழநி பஞ்சாமிர்தம் விரைவில் புவிசார் குறியீடு பட்டியலில் இடம்பெற உள்ளது.
புவிசார் குறியீடு:
ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த பொருள் தரத்துடன், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும். புவிசார் குறியீடு வழங்கும் பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, பிறஇடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
திருப்பதியில் லட்டு போல, பழநி முருகன் கோயிலின் பிரசாதமான 'பஞ்சாமிர்தம்' உலக பிரசித்திபெற்றது. எனவே பழநி பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2016ம் கோயில் நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள இதற்கான மையம் டில்லியில் உள்ள தலைமையகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக கோயில்களில் முதன்முறையாக பிரசாதத்திற்கென புவிசார் குறியீடு பெறுவது பழநி பஞ்சாமிர்தத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயார் செய்தால் அதிபட்சம் 15 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தலாம். கோயில் நிர்வாகம் அரைக் கிலோ டப்பா ரூ. 35, டின் ரூ.40, கிப்ட் பாக்ஸ் ரூ.300க்கு விற்கிறது.
திருப்பதியில் லட்டு போல, பழநி முருகன் கோயிலின் பிரசாதமான 'பஞ்சாமிர்தம்' உலக பிரசித்திபெற்றது. எனவே பழநி பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2016ம் கோயில் நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள இதற்கான மையம் டில்லியில் உள்ள தலைமையகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக கோயில்களில் முதன்முறையாக பிரசாதத்திற்கென புவிசார் குறியீடு பெறுவது பழநி பஞ்சாமிர்தத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயார் செய்தால் அதிபட்சம் 15 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தலாம். கோயில் நிர்வாகம் அரைக் கிலோ டப்பா ரூ. 35, டின் ரூ.40, கிப்ட் பாக்ஸ் ரூ.300க்கு விற்கிறது.

பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்க ஆட்சேபம் இருப்பின் ஆக.,12க்குள் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டனர். ஆட்சேபம் எதுவும் இல்லாததால் புவிசார் குறியீடு கிடைப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் டில்லியில் உள்ள மையம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி தயாரிப்பு?
கற்பூரவள்ளி அல்லது மலை வாழைப்பழம்: 152 கிலோ
நாட்டு சர்க்கரை: 288 கிலோ
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்: 25 கிலோ
கற்கண்டு :-15 கிலோ
நெய் -: 6 கிலோ
தேன்- : 2 கிலோ
இவற்றை மொத்தமாக சேர்த்து, நவீன தொழில்நுட்ப இயந்திரம் மூலம் 488 கிலோ எடையுள்ள பஞ்சாமிர்தம் தயார் செய்யப்படுகிறது. டப்பாவின் எடையுடன் சேர்த்து, 1000 அரைக்கிலோ டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
நாட்டு சர்க்கரை: 288 கிலோ
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்: 25 கிலோ
கற்கண்டு :-15 கிலோ
நெய் -: 6 கிலோ
தேன்- : 2 கிலோ
இவற்றை மொத்தமாக சேர்த்து, நவீன தொழில்நுட்ப இயந்திரம் மூலம் 488 கிலோ எடையுள்ள பஞ்சாமிர்தம் தயார் செய்யப்படுகிறது. டப்பாவின் எடையுடன் சேர்த்து, 1000 அரைக்கிலோ டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
பஞ்சாமிர்த ஏற்றுமதி அதிகரிக்கும்:
புவிசார் குறியீடு வல்லுனர் சஞ்சய்காந்தி கூறியதாவது: ஒரு கோயில் பிரசாதத்திற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது. கோயில் தயாரிப்புக்கு மட்டுமின்றி, பழநியில் இருக்கும் பிற தயாரிப்பாளர்களுக்கும் இந்த புவிசார் குறியீடு பொருந்தும். கோயில் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தயாரிப்பு முறைகளை பின்பற்றி அவர்களும் தயாரிக்க வேண்டும். மாற்ற கூடாது. பழநியை தவிர வேறு பகுதியை சேர்ந்தவர்கள் பழநி பஞ்சாமிர்தம் எனக் கூறி விற்க முடியாது. வெளிநாடுகளுக்கும் இந்த பிரசாதமாக அனுப்ப முடியும். இனி தமிழகத்தின் சில முக்கியமான கோயில் பிரசாதங்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment