Thursday, April 16, 2020

திமுக தொண்டர்களை பார்த்து பரிதாபபடுவதை தவிர ஏதும் செய்யமுடியாது.

நிச்சயம் அவர் கோடீஸ்வரர், அவரின் அப்பாவும் மாமன் மச்சானும் கோடீஸ்வரர்கள், அதனால் கோடிகளில் அவர் டீல் பேசுவது ஒன்றும் விஷயமே அல்ல‌
ஆனால் கொரோனாவில் இறந்தவர்களுக்கும் ஒரு கோடி அரசு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் பொறுப்பற்றதனத்தை காட்டுகின்றது
உலகெல்லாம் போர்காலம் போல் மக்கள் இறக்கும் நேரம் , பெரும் வல்லரசுகளே மூச்சுவிட திணறும் நேரம் எவ்வளவு அசால்ட்டாக செத்தவனுக்கு ஒரு கோடி என சொல்லிகொண்டிருக்கின்றார் இந்த மனிதர்
அப்பொழுதும் எம்.எல்.ஏ சம்பளத்தை கொடுக்க மனமில்லை, அரசு ஊழியர் சம்பளத்தை குறைக்க சொல்ல மனமில்லை, எதுவுமே சொல்லாமல் ஆளுக்கு ஒரு கோடி என்பது எப்படி சாத்தியம்?
நல்லவர் தீவிரவாதத்தால் கொல்லபட்ட கோவை மக்கள் 196 பேருக்கு ஆளுக்கொரு கோடி என சொன்னாரா? இல்லை ராஜிவோடு கொல்லபட்டவர்களுக்கு சொன்னாரா?
இன்றும் ஆங்காங்கே நடக்கும் கலவரங்களில் செத்தவர்களுக்கு சொன்னாரா?
கன்னியாகுமரி வில்சன் எனும் காவலருக்கு சொன்னாரா? முன்பு கோவையில் கொல்ல்பட்ட செல்வராஜ் என்பவருக்கு சொன்னாரா?
அதெல்லாம் சொல்லமாட்டார், நாட்டுக்காக செத்தாலும் சொல்லமாட்டார், தேசவிரோதிகளால் கொல்லபட்டாலும் சொல்லமாட்டார்
ஆனால் கொள்ளைநோயில் செத்தால் சொல்வார், அதுவும் எதிர்கட்சியாக இருந்தால் சொல்வார் என்பதெல்லாம் அபத்தம்
நோய்களில் இம்மாநிலத்தில் சாவோர் ஏராளம், விபத்துக்களிலும் புற்றுநோய் இதயநோய் இன்னும் பல நோய்களில் அனுதினமும் சாவோர் ஏராளம்
கொரோனா நிச்சயம் ஒரு விபத்து போன்ற கொள்ளை நோய், அதற்கு ஒரு கோடி என்பது எவ்வகையில் நியாயம்
நல்ல வேளையாக இரு வருடங்களுக்கு முன் ஸ்டாலின் ஒன்றை சொல்லவில்லை இரு மாதங்களுக்கு முன்பும் சொல்லவில்லை
ஆம், கருணாநிதி இறந்தபொழுது முதியவர் வருமானத்தில் வாழ்ந்த அந்த ஏழை குடும்பத்துக்கு 5 கோடி நிதி என சொல்லவில்லை, அன்பழகன் இறந்தபொழுதும் 1 கோடி நிதி என கோரவில்லை
அவ்வகையில் தமிழகத்துக்கு நல்லது
நல்லவர் கொரொனாவில் மருத்துவர் செத்தால் 1 கோடி என சொல்லட்டும் , இல்லை 10 கோடி கொடுங்கள் என தமிழகமே சொல்லும் அவர்கள் படும் அவஸ்தை அப்படி, செய்யும் தியாகம் அப்படி
நர்ஸுகளுக்கு கொடுக்க சொல்லுங்கள் அர்த்தமுணு
காவலருக்கு, துப்புறவு தொழிலாளருக்கும் கொடுத்தாலும் அர்த்தமுண்டு
இதையெல்லாம் இவர் ஏன் சொல்லவில்லை என்றால் சொல்லமாட்டார், அதற்கெல்லாம் பொது நல அபிமானமும் தியாக உணர்வும் இன்னும் பல நல்ல குணங்களும் வேண்டும், அவருக்கு அது சுத்தமாக வராது
இவர் ஒருமாதிரியான ஆசாமி என்பது தெரியும், ஆனால் யாருமற்ற தனி அறையில் மாஸ்க் போட்டு கொண்டு ஒருவர் வீடியோ கான்பரன்ஸில் பங்கேற்றதில் இப்பொழுது முழுவதுமாக அவரைபற்றி தெரிகின்றது
ஆன்லைன் மூலமாக கொரொன பரவும் என நம்புவார் போலிருக்கின்றது
திமுக தொண்டர்களை பார்த்து பரிதாபபடுவதை தவிர ஏதும் செய்யமுடியாது.
(ஒருவேளை பழனிச்சாமி கொரோனா நோயால் செத்தால் 1கோடி என அறிவித்தால் என்னாகும்? அதில் சிக்கினால் உயிர்தப்பலாம் எனும் நிலையிருக்கும் போது என்னாகும்?
அவனவன் கொரோனாவினை வலிய இழுக்க " "டாக்டர் கொரோனான்னு சர்டிபிக்கேட் கொடுங்க டாக்டர், உங்களுக்கு 10% கமிஷன் டாக்டர்" என கிளம்ப மாட்டானா?
அந்த நாடகத்தை திமுக எதிர்பார்க்கின்றது, நாடக கோஷ்டிக்கு வேறு என்ன தெரியும்)
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...