Friday, July 31, 2020

பெரியார் ஏன் இந்து மதத்தை கடுமையாய் எதிர்த்தார் ?

உயர் ஜாதியாய்
ஒருவன்
தாழ்ந்த ஜாதியாய்
இன்னொருவன் இருப்பது
இந்து மதத்தில் தான்

ஊர் சேரி என
தீண்டாமைக்கு
அங்கீகாரம் தந்தது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
பெண்கள் மேலாடை அணிய
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

இறந்த கணவனை
எரிக்கும் நெருப்பில்
மனைவியையும் சேர்த்து
எரிய வைத்தது
இந்து மதத்தில் தான்

ஒடுக்கப்பட்ட சமூக
பெண்களுக்கு
பொட்டுக்கட்டி விட்டது
இந்து மதத்தில் தான்

கணவனை இழந்த
கைம்பெண்களுக்கு
மறுமணம் மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
இந்துக் கோவில்களுக்குள்
இந்துக்களுக்கே
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
தெருவில் நடக்க
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
தோளில் துண்டு போட
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
பொதுக் குளத்தில்
நீர் எடுக்க
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
காலில் செருப்பு போட
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
டீக்கடைகளில்
இரட்டைக் குவளை முறை
அனுமதிக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

சக மனிதனை
தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு என
சட்டங்கள் வகுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஒரு குலத்திற்கே
கல்வி என
வர்ணாசிரமம் வகுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

செருப்பு தைக்கிறவனின் மகன்
செருப்பு தான்
தைக்க வேண்டும் என
குலத் தொழிலை ஆதரித்தது
இந்து மதத்தில் தான்

பெண்கள்
பாவ யோனியில்
பிறந்தவர்கள் என
பெண்களை சிறுமைப்படுத்தியது
இந்து மதத்தில் தான்

Image may contain: 9 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...