Thursday, July 9, 2020

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் .

திமுக ஆட்சியில் இல்லைதான் ஆனாலும் அதனுடைய அதிகாரம்தான் எல்லா இடத்திற்கும் செல்லுபடியாகிறது.இவர்கள் எல்லோரையும் கேள்வி கேட்பார்கள்,கீழ்த்தரமாக விமர்சிப்பார்கள் ஆனால் அவர்களை நோக்கி இங்கே யாரும் நியாயமான கேள்வியை கூட கேட்க முடியாது.மிரட்டுவார்கள்,மிதித்து நசுக்குவார்கள் இதுதான் கால காலமாக இங்கே நடப்பது.
இங்கே ஊடகங்கள் இவை எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டும் அதற்கு காவடி தூக்கிக் கொண்டும்,திமுக பொன்னுலகை படைப்பது போல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.உண்மையின் தரப்பாக பேசவோ,மக்களின் குரலை வெளிக் கொண்டு வரவோ யாருமில்லை.50 ஆண்டு கால அதிகாரத் திமிருக்கு சலாம் போட்டவர்கள் கேள்வி கேட்பவர்களை குனிந்து வா என்கிறார்கள்.
திரு.மாரிதாஸ் ஊடகங்களை பற்றி பேசியதையும்,திமுகவின் முட்டு தாங்கிகளாக அவர்கள் இருப்பதையும் வட்டமிட்டு காட்டியதற்காக அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.இதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.அராஜகம்,கொலை வெறிகள் உலகத்தில் எதையும் சாதிக்க முடியாது.
இது மேலும் மேலும் பல மாரிதாஸ்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது.தேர்தல் நேரம் நெருங்க நாம் தோற்றுவிடுவோம் என்கிற உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது திமுகவிற்கும் அதன் கைகூலி ஊடகங்களுக்கும்.எனவே, வன்முறையின் மூலம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றலாம் என்று பார்க்கிறார்கள்.நான் திரும்பவும் சொல்கிறேன் அடுத்த 5 வருடமும் உங்களுக்கு கூப்புதான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...