Saturday, July 11, 2020

அது வரவேற்க தக்கதல்ல...

சித்தீ... வரப் போகுதாம்...
தலைமை மாறப் போகுதாம்...
2 கட்சிகளும் இணையப்போகுதாம்...
420 கும்பலின் புரட்டு அரசியல்.???
என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தெரியவில்லை..
இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, சசிகலா விடுதலையில் அதிமுக அமைச்சர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது.. இதையெல்லாம் பார்த்தால், சசிகலாவிடம் தலைமை பொறுப்பை அதிமுக தந்துவிடுமோ என்ற சந்தேகமும் அச்சமும் எழுந்து வருகிறது!!
சசிகலா விடுதலை பற்றின பேச்சு தொடர்ந்து அடிபட்டு கொண்டே இருக்கிறது... இவரை வெளியில் கொண்டுவருவதற்கு ஏராளனமான முயற்சிகளில் சட்டம் படித்த நுணுக்கர்கள் சிலர் இறங்கி உள்ளனர்.
அதேசமயம், பாஜக ஆதரவு இல்லாமல் சசிகலாவை வெளியில் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளதையும் சசிகலா குடும்பத்தினர் புரிந்து வைத்துள்ளனர். கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், அவரது விடுதலை நாள் தள்ளி போகும் என்ற பேச்சும் எழுந்தபடியே உள்ளது.
ஆனால், எப்படி பார்த்தாலும், சசிகலா வருவது அதிமுகவுக்கு கலக்கத்தை தருவது போல சுத்தமாக தெரியவில்லை.. #செல்லூர் ராஜு முதல் #விஜயபாஸ்கர் வரை இதுவரை சசிகலாவை விமர்சித்தது இல்லை.. அதேசமயம் இவர்களை பற்றின கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்காமல் விட்டதும் இல்லை.
"சசிகலா ஜெயிலில் இருப்பது ரொம்பவும் கஷ்டமா இருக்கு.. சீக்கிரம் அவர் விடுதலையாக பிராத்திக்கிறேன்" என்று ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.
இந்நிலையில், "ஜெயிலில் இருந்து சசிகலா வெளியே வந்தால், அதிமுகவை யார் வழி நடத்துவது என்று தலைமைதான் முடிவு செய்யும்" என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியனே ஓபனாக கூறியுள்ளார்.
அமைச்சர் மணியனின் இந்த கருத்தை நாம் எப்படி பார்ப்பது? இது அவர் சொந்த கருத்து என்று எடுத்து கொள்வதா? அல்லது மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய அமைச்சரின் பேட்டியாக எடுத்து கொள்வதா, அல்லது அதிமுக தரப்பின் நிலைப்பாடாக எடுத்து கொள்வதா? என தெரியவில்லை.
ஒருவேளை அமைச்சரின் சொந்த கருத்தாக இருந்தால், அதை நாம் விமர்சிப்பதற்கில்லை.. அது அவர் விருப்பம்.. மாறாக, கட்சியின் நிலைப்பாடாக இருந்தால், அது ஏன் என்று தெளியப்படுத்த வேண்டும்... கட்சி தலைமை சசிகலாவிடம் தலைமையை ஒப்படைப்பதாக இருந்தால், அதற்கான காரணங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதை சாதாரண வரிகளாக எடுத்து கொண்டு நாம் கடந்து போய்விட முடியாது.. விடுதலையாகி வந்தாலும், அதிமுகவில் அவருக்கு இடமே இல்லை என்று சொல்லி கொண்டிருந்தவர்கள், இப்போது ஏன் இப்படி பேசுகிறார்கள்? எதற்காக சசிகலா பக்கம் சாய்கிறார்கள்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சசிகலா பற்றி இதுவரை எடப்பாடியார் காட்டமான அறிக்கை, பேட்டி, வார்த்தைகளை உதிர்த்ததும் இல்லை.
ஆட்சியிலோ கட்சியிலோ சசிகலா கும்பலுக்கு இடமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே எதிர்ப்பு காட்டி வருகிறார்.
அமைச்சர் ஜெயக்குமார் காட்டிய எதிர்ப்பைகூட முதல்வர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர் ஆதரவாளர்கள் கூட இந்த கொள்ளைக் குற்றவாளி சசிகலா குறித்து வாயைத் திறப்புவதில்லை
என்பதும் கவனிக்கத்தக்கது!
திமுக தற்போது பலம் பொருந்தி எழுச்சியுடன் வந்து கொண்டிருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர் அதனால் திமுகவை சமாளிக்க முடியாமல் குற்றவாளி சசிகலாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்ககூடுமோ, அல்லது கொரோனா உட்பட தமிழக பிரச்சனைகளை கையாள முடியாமல் சசிகலா என்ற ஒற்றை தலைமையை அணுக கூடுமோ என்றும் ஐயத்தை ஏற்படுத்துகிறார்களா தெரியவில்லை.
இந்த சமயத்தில்தான் இன்னொரு தகவல் கசிந்துள்ளது.. துணை முதல்வர் ஓபிஎஸ் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, ஆடிட்டர் குருமூர்த்தியும், டிடிவி தினகரனும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாக சொல்கிறார்கள்.. முதல்வரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொள்ள போவதாகவும் அப்போது அவர் நம்பிக்கை தந்ததாக கூறப்படுகிறது..
இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.. இது உண்மையாக இருப்பின், அது வரவேற்க தக்கதல்ல...
சசிகலா மாஃபியா கும்பல் அதிமுக வில் இணைவதை ரத்தத்தின் ரத்தங்கள் அப்போதிலிருந்தே எதிர்த்து வருகின்றனர்.
ஆனால், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கட்டி இழுத்த செல்ல, மிகப்பெரிய ஆளுமை தேவைப்படுகிறது என்பது மட்டும் புரிகிறது..
அது சசிகலா போன்ற கொள்ளைக்குற்றவாளிக்கு இல்லை என்று அதிமுகவில் பெரும்பாலானோர் நம்புவதாகவும் தெரிகிறது..
எது எப்படி இருந்தாலும், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை அணுமானங்களும், யூகங்களும் கூடிக்கொண்டுதான் போகும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...