Wednesday, July 29, 2020

கால_சர்ப்ப_தோஷம்_நீங்க…..

ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகம் காலசர்ப்ப தோஷ ஜாதகம் ஆகும்.
இப்படிப்பட்ட ஜாதகம், அமைய பெற்றவர்கள் காலதர்ப்ப தோஷப் பரிகாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால், காரியத்தடைகளும் திருமணத்தடையும், புத்திர தோஷமும் ஏற்படும்.
காலசர்ப்ப தோஷம் ராகுதசை உள்ளவர்கள், கேது தசை நடப்பவர்கள், லக்னத்தில் 2ல் ராகு அல்லது கேது, லக்னத்திற்கு 8ல் கேது அல்லது ராகு உள்ளவர்களும் சர்ப்பதோஷப் பரிகாரம் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நன்மைகள் அடையலாம்.
இந்த தோஷத்திற்கு எளிய செலவில், பரிகாரம் செய்ய தமிழ்நாட்டில் புதுகோட்டை மாவட்டம் #பேரையூர் என்ற ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு மிக்க பிள்ளைப் பேறு வழங்கும் நாகநாத சிவன் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் சர்ப்பதோஷப் பரிகாரத்திற்காக ரிஷபாரூடராக காட்சி தருகிறார்கள் ராகுவும், கேதுவும்.
இத்திருத்தலத்திற்கு சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும், நீராடிய பிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி, அங்கேயே போட வேண்டும். தலைக்கு மேல் ஈரஆடைகளை கொண்டு வரக்கூடாது, அதன் பிறகு இக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்து, தோஷம் நீங்கி நன்மை அடையலாம்.
திருக்கோவில் முகவரி நாகநாத சிவன் கோவில் பேரையூர், சிவபுரம் வழி - 622422
சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30க்குள் ராகுகாலத்தில் செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து, நமன சமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில், பேரையூர் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...