Sunday, July 12, 2020

இது தான் #முற்போக்கு #ஊடக புடுங்கிகளின் இலட்சம்.!

#திமுக அடிமை நியூஸ்18 குணசேகரனால் ஒரு குடும்பம் அழிந்த கதை!
#மாரிதாஸ் கூறியது வெறும் 10%தான்!
இவர்களின் ஊடக அதர்மத்திற்கு ஆயிரம் நிகழ்வுகளை சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
#விழுப்புரம் செந்தில் - நவீனா விவகாரம்.
நடைபெற்ற ஆண்டு – 2016 என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.
#விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரோடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன், கூலி தொழிலாளி. இவரது மகள் நவீனா. வயது 17 விழுப்புரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அம்மாணவி நன்றாக படிக்கக் கூடியவள். +2 முடித்ததும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப் படிப்பு படித்து ஒரு வேளாண் விஞ்ஞானியாக வேண்டும் என்று அடிக்கடி தன் தங்கை நந்தினியிடம் கூறி வந்துள்ளாள்.
#தினமும் பள்ளிக்கு மினி பேருந்தில் சென்று வருவாள்.
அந்த ரூட்டில் செல்லும் ஒரு மினி பேருந்தின் நடத்துனர்தான் செந்தில். வயது 35. அவள் பள்ளிக்கு போகும் போதெல்லாம் தொடர்ந்து நவீனாவை சீண்டியுள்ளான்.
படிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் அவள் அந்த பொறுக்கியை கண்டு கொள்ளவில்லை.
#ஆனாலும் தொடர் தொல்லைகள் தரவே பள்ளிக்கு செல்வதையே குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர். மனம் உடைந்து வீட்டில் இருக்கிறாள் நவீனா.
#பிறகு ஊரார் நடத்துனரை கண்டித்து அவளுக்கு தைரிய கொடுக்கவே திரும்பவும் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கிறாள் நவீனா. ஆனாலும் செந்தில் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறான்.
#இந்நிலையில் ஒருநாள் செந்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் ரயில்வே டிராக்கில் விழுந்துள்ளான். இதில் ரயில் மோதியதில் செந்திலின் ஒரு காலும், கையும் துண்டானது. ஆனால் போலீஸ் விசாரணையின் போது செந்திலும் அவரது வீட்டாரும், செந்தில் நவீனாவை காதலித்ததாகவும் அதானால் நவீனாவின் மாமா அவனது கை, காலை துண்டித்து விட்டதாக கூறி உள்ளனர்.
#உடனே, குணா & டீம் இதை சென்சேஷனல் ஆக்குகிறது. ஒரு 17 வயது பெண்ணை ஒரு 35 வயது ஆண் காதலித்தான் என்றும் அதனால் அப்பெண்ணின் மாமா அவனை வெட்டி விட்டார் என்றும் ஒரு பொய்யான செய்தியை விவாதமாக்கி, ஒரு மைனர் பெண் என்றும் பாராமல், 35 வயது ஆண் எப்படி ஒரு மைனர் பெண்ணை காதலிக்கலாம் என்று குறைந்த பட்ச நியாயத்தை கூட கேட்காமலும் போலீஸ் தரப்பு விசாரணை முடிவடையாத நிலையில் ஊர் உலகத்திற்கே ஒரு தலித்திற்கு ஒரு 17 வயது பெண்ணைக் காதலிக்கும் உரிமை இல்லையா என்று அநியாயமாக ஒரு விவாதம் நடத்தி அச்சிறுமியை அவமானப் படுத்தினார்கள்
#செந்திலை அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து ஒரு ஹீரோவாக்கப்பட்டு அனைவரும் பொங்கி எழுகின்றனர்.
அதிலும் பொய் வழக்கிற்கு பொங்கிய சுப. வீரபாண்டியனின் நடிப்பு செவாலியர் சிவாஜியையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது. செந்தில் என்கிற பொறுக்கி ஹீரோபோல சித்தரிக்கப் படுகிறான்.
#இதே விவகாரத்தை வைத்து உடனே விசிக ரவிக்குமார் விழுப்புரத்தில் ஆர்பாட்டத்தை முன்னெடுக்கிறார்.
#இதையெல்லாம் பார்த்த நவீனாவின் குடும்பத்தினர் மீண்டும் போலீஸில் புகார் கொடுக்கின்றனர்.
#விழுப்புரம் மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்தபோதுதான் ரயில் ஏறி கை, கால் துண்டானது தெரிய வருகிறது.
எனவே, பொய் புகார் விவகாரத்தின் செந்திலை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
#காவல்துறை விசாரணையில் இருக்கும் போதே எதையும் விசாரிக்காமல் புலனாய்வு புலி என்ற போர்வையில் ஒரு விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
இதற்கு பிறகுதான் அந்த பெருங்கொடுமையும் நடந்தது..
#ஜாமீனில் வெளியே வந்த செந்தில், ஜீலை 30ம் தேதி நவீனா வீட்டுக்கு குடிபோதையில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தகராறு செய்கிறான்.
#தான் படிப்பை மட்டுமே விரும்புவதாகவும், அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மறுத்து மன்றாடுகிறாள்.
உடனே நீயும் நானும் சேர்ந்தே செத்து போயிடுவோம் என்று சொல்லி, அவள் உடம்பில் பெட்ரோலை ஊற்றி எரித்து நவீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டு புரள்கிறான்.
#சிறிது நேரம் கழித்து அலறல் சத்தம் கேட்கவே நவீனாவின் தங்கை நந்தினி ஒடி வந்து நவீனாவை காப்பாற்ற முயற்சி செய்ததால் அவளுக்கும் உடலில் தீக்காயம் ஏற்படுகிறது. அக்காவை காப்பாற்ற முடியாத நிலையில் பயத்தில் நந்தினி மயங்கி விழுந்து விடுகிறாள்.
50 % தீக்காயங்களுடன் செந்தில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி, தீவிர ஆல்கஹாலிக்கானதால் மருந்துகள் பயனற்று இறந்து போகிறான்.
#முதல் சிகிச்சை முடிந்து சீரியஸ் ஆகி விட்டதால் 80% தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நவீனா நான்கு நாட்கள் வலியால் துடித்து துடித்து ஆகஸ்ட் 3ம் தேதி இறந்து போகிறாள்.
#இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபடுகின்றனர்.
#போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். நவீனா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். இத்துடன் இந்த நிகழ்வு வழக்கம்போல அனைவருக்கும் மறந்து போனது.
#ஊர் முழுக்க ஒரு பொய் செய்தியை வைத்து கொண்டு விவாதம் நடத்திய குணசேகரன் பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டு தன் கடமையை முடித்து கொள்கிறார். அதுவும் செந்திலின் மூர்க்க குணத்தால் ஒரு பெண்ணை துடிக்க துடிக்க பெட்ரோல் ஊற்றி எரித்தானாம்.
#அன்று அந்த பொறுக்கி செந்திலுக்கு ஆதரவாக தொலைக்காட்சிகளிலும் பொதுவெளிகளிலும் வாய்கிழிய வக்காலத்து வாங்கி விட்டு ஒரு பொய் செய்தியை உண்மை என நம்பவைத்த கயவர்கள்,
நவீனாவை கொலை செய்யும் அளவிற்கு செந்திலுக்கு திமிரும் தைரியமும் வரும் அளவிற்கு செய்து விட்டும், தங்களின் தவறுகளையெல்லாம் மறைத்து விட்டு 4 பேருக்கு மட்டும் தெரியும் வகையில் நவீனாவுக்கு அஞ்சலி செய்தியை பதிவிட்டு விட்டால் அந்த குழந்தையின் உயிர் திரும்ப வருமா?
#அன்றே தீர விசாரித்து அந்த கயவனிற்கு காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டியது தானே ஒரு ஊடகத்தின் கடமை?
பள்ளியில் படிக்கும் பெண்ணை துரத்தி துரத்தி நாடக காதல் செய்யும் பொறுக்கிகளுக்கு வக்காலத்து வாங்குவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்வது,
தீர விசாரிக்காமல் முன் முடிவுடன் செய்திகளை வெளியிடுவது போன்ற பலவற்றை செய்கிறார்கள் என்பதைதான் மாரிதாஸ் சொல்கிறார்.
#நவீனா இறந்ததும் இவர்கள் அலங்கரித்த அரிதாரம் கலைந்தது, உண்மை உலகிற்கு தெரிந்தது.
ஜப்பான் துணை முதல்வர் எப்போதும் போல நவதுவாரத்தையும் மூடிக்கொண்டார் . உடனே அந்த நிகழ்ச்சியின் பதிவு youtube மற்றும் இவர்கள் சார்ந்த முகநூலில் இருந்து அழிக்கப்பட்டது. எவ்வளவு கடமை உணர்சியுடன் பணியாற்றுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
குணசேகரன் எச்ச பய ஒரு மன்னிப்பு பதிவு போட்டுட்டு ஒதுங்கி விடுகிறான்!
இதனால் விளைந்த பயன் என்ன?
#இதற்கெல்லாம் பிறகு 2019 ஆண்டு அதே விழுப்புரம் (தனி) மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
#இவர்களின் மறைமுக அஜெண்டா இதுதான் எனபதை தான் புரிந்து கொள்ள வேண்டும்.
#விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள்தான். அதில் முதல் குற்றவாளி இது போன்ற கொலைகார ஊடகங்களே.

Image may contain: 1 person, suit

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...