ஒரு பெண் என்பவள் பழங்காலம் தொட்டு இன்று வரை ஒரு குடும்பத்தை மேல்நோக்கி எடுத்து செல்லும் முக்கியமான பொறுப்பில் உள்ளவள். பொதுவாக பெண்களுக்கு ஏராளமான குழப்பங்களும், பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதை எல்லாம் கடந்து தனது குடும்பம் தான் தனக்கு எல்லாம் என்று நொடிக்கு நொடி தன் குடும்பத்தை பற்றியே எண்ணுபவளாக இருக்கிறாள் பெண். அப்படி இருக்கையில், மகாலட்சுமியின் சுயரூபமாக கருதப்படும் ஒரு பெண் தான் அறியாமலே செய்யும் சில தவறுகளால் அவளது குடும்பத்தை கஷ்டம் சூழ்கிறது. அப்படியான தவறுகள் என்னென்ன? எதை எல்லாம் பெண்கள் தவிர்ப்பது நல்லது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். முதலாவதாக பெண்கள் எப்பொழுதும் நறுமணமுடன் இருக்க வேண்டும். அப்படி என்றால் தினமும் தலையில் வாசனை நிறைந்த மலர்களை வைத்து இருக்க வேண்டும். இன்றைய சூழலில் பொருளாதார அடிப்படையில் தினமும் தலை நிறைய பூ வைத்து கொள்ள முடியாவிட்டாலும் 2 இனுக்கு என்பார்கள் அல்லவா அது மாதிரி சிறிதளவு வைத்தால் கூட போதுமானதாகும். பெண்கள் தலையில் பூ வைத்துக்கொள்வது என்பது மங்களகரமான ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. அதை தவிர்ப்பது என்பது மங்களமாக கருதப்படுகிறது. அது போன்ற செயல் நமக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு தினமும் நறுமணம் மிகுந்த பூக்களை தலையில் வைத்துக்கொண்டு விளக்கு ஏற்றி வருவதன் மூலம் நமது வீடு சுபிட்சமாக இருக்கும். இரண்டாவதாக பெண்கள் தினமும் முகத்தில் மஞ்சள் பூசி குளித்து வந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். ஆனால் மஞ்சள் பூசி குளிக்க விருப்பம் இல்லாதவர்கள் சிறிதளவு மஞ்சளை கையில் எடுத்து முகத்தில் தெரியாதவாறு பூசிக்கொள்ளலாம். மஞ்சள் தினமும் பூசி கொள்வதன் மூலம் நமது வீடு ஐஸ்வர்யம் நிறைந்ததாக இருக்கும். முடிந்த அளவிற்கு நமது வீட்டை ஐஸ்வர்யத்துடன் வைத்திருக்க முடியும் என்றாரல் தினமும் மஞ்சள் பூசுவதில் எந்த தவறும் இல்லை. மூன்றாவதாக பெண்கள் வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். பெண்கள் ஸ்தானம் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். இதை ஏன் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. சுத்தம் என்பது மட்டுமல்லாமல் பெண்கள் ஸ்தானம் செய்யும் பொழுது அவர்கள் உச்சி பகுதியில் உள்ள சக்கரம் விரிவடைகிறது. அந்தச் சக்கரம் விரிவடையும்போது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சக்திகள் பெண்களின் உடம்பின் உள்ளே நேரடியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சக்கரம் முழுமையாக விரிவடைய நாம் செய்ய வேண்டியது தலைக்கு குளிப்பதற்கு முன்னர் 3 கப் தண்ணீரை தலையில் நேரடியாக ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சக்கரம் முழுமையாக விரிவடையும். பிரபஞ்சத்தின் முழுமையான சக்தி பெண்களுக்கு கிடைக்கிறது. இது சாஸ்திரத்தில் உள்ள முக்கிய குறிப்பாகும். நான்காவதாக பெண்கள் குளிக்கும் போது தங்களது மனதில் பிரச்சினைகள் மற்றும் தேவையில்லாத சிந்தனைகளை பற்றி ஆர்ப்பரித்து யோசித்துக் கொண்டிருப்பதுண்டு. இப்படி செய்யாமல் நல்ல விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களிடம் ஐஸ்வர்யம் தானாக வந்தடையும். ஐந்தாவதாக பெண்கள் குளிக்கும் போது ஒரு ஆடையுடனாவது தான் குளிக்க வேண்டும். அப்படி ஆடை இல்லாமல் குளிக்கும் போது தீய சக்திகள் ஆக்கிரமிக்க வாய்ப்புகள் உள்ளது. பெண்களாக இருக்கட்டும் ஆண்களாக இருக்கட்டும் உடம்பில் ஆடை இல்லாமல் குளிக்கக் கூடாது என்று சொல்கிறது நமது சாஸ்திரங்கள். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை கடைப்பிடித்து பாருங்கள். நிச்சயம் உங்களது பிரச்சினைகளுக்கு அடுத்தடுத்து தீர்வுகள் கிடைக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment