Wednesday, July 7, 2021

நம்முடைய உலக ஆசைகள் ஒவ்வொன்றாக, நம்மை விட்டு ஓடி விடும் .

 _*ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன.*_ _*எனவே, தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.*_

_*அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.*_ _*ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.*_ _*எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.*_
_*அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார்.*_ _* அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன், அவரவர் பழங்களை பிரித்துக் கொடுத்துவிடுவோம்.இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்” என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும்,அவ்வாறே பழங்களைப் பகிர்ந்தளித்தது. அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன், பழங்களின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து, “தலைவரே! இன்று முழுதும் விரதம் இருக்கப் போகிறோம். நாம் இதை உண்ணும்பொழுது,தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறதே? எனவே பழங்களை, அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம்” என்றது.*_ _*அவ்வளவுதான்! பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.*_
_*சற்று நேரம்தான் ஆகியிருந்தது. வாயில் ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம், தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. _*மனிதனின் மனமும் இப்படி குரங்கு போன்றது. இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் விரத முயற்சியும், உலகப்பற்றை விடும் முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது. சில பேருக்கு உலக ஆசையை வேகமாக விட்டுவிட வேண்டும் என்று எண்ணினாலோ,முயற்சித்தாலோ,அது நடப்பதில்லை. ஏனெனில்,அது எதிர்மறைச் சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்துவிடுகிறது. மாறாக நாம் ஆன்ம நாட்டத்தையும், இறைவன் மேலுள்ள பற்றையும், சிறிதுசிறிதாக அதிகப்படுத்திக் கொள்ளும்போது, தானாக நம்முடைய உலக ஆசைகள் ஒவ்வொன்றாக, நம்மை விட்டு ஓடி விடுவதை உணரலாம்.*_

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...