கோடை, குளிர், மழை என்ற மூன்று பருவநிலைகளை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு பருவநிலைகளிலும் சில தொற்று நோய் தாக்கம் இருந்து வருகிறது. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது சளித்தொல்லை, இருமல், தலைவலி, காய்ச்சல். மூன்று பருவ நிலைகளிலும் இந்த தொற்று பொதுவாக பலரையும் பாதித்து வருகிறது. இதற்காக மருத்தவரிடம் செல்வது, மாத்திரைகள் சாப்பிடுவது என பலரும் ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, July 6, 2021
சுக்கு மல்லி காஃபி பொடி தயாரிப்பது எப்படி? மழைக்காலத்தில் ரொம்ப உதவியா இருக்கும்!
இயற்கை மருத்துவத்தில் நமக்கு பல நன்மைகளை கொடுக்கும் பொருட்களில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றுக்கும் தனி இடம் உண்டு. இதில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தலைவலி மற்றும் வறட்டு இருமல் ஆகிய தொற்றுகளுக்கு உடனடி நிவாணம் அளிக்கப்கூடியது சுக்குமல்லி பொடி. இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வரும் இந்த பொடியை தயாரிப்பது மிகவும் எளிது. அதனை எப்படி தயார் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
சுக்கு – 15 கிராம் (தேவைக்கேற்ப)
மல்லி – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 3
முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அவை அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அறைத்து எடுத்தால் சுக்கு மல்லிப்பொடி தயார். தற்போது கொடுத்துள்ள அளவு ஒரு நபர் 10 நாள் பயன்படுத்தும் அளவுக்கு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் அதிமான நபர்கள் பயன்படுத்தும்போது தேவைற்கேற்ப அனைத்து பொருட்களையும் சேர்த்து அறைத்துக்கொள்ளலாம்.
இந்த சுக்குமல்லி பொடியை மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம். பால் அல்லது கொதிக்கவைத்த தண்ணீரில் நாட்டுச்சக்கரையுடன் கலந்து குடிக்கலாம். மழைகாலத்தில் ஏற்படும் சளி இருமல், காய்ச்சல், வறட்டு இருமல், ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment