Monday, September 27, 2021

கார்ப்பரேட் கம்யூனிஸ்ட்களின் ரூ 4000 கோடி சொத்து!

 

🐐 தொழிலாளர்களின் டோலனும், ரூ 4000 கோடியும்.
(2005 நிலவரம்)
🐐 பல கோடி ரூபாய் மதிப்பிலான தலைமை அலுவலகம் கொண்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம்,
🐐 செய்தித்தாள்கள்,
🐐 ரிசார்ட்ஸ்,
🐐 வாட்டர் தீம் பார்க்
இவையெல்லாம் சொந்தமாக கொண்ட ஒரு அமைப்பு தொழிலாளர்களின் தோழனாம்!
பெரும் வர்த்தக அமைப்புகளிடம் இல்லாத அளவிற்கு சொத்தும், வசதிகளும் கொண்ட இந்த அமைப்பு எது தெரியுமா?.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில கிளை தான்.
ஆனால் ‘தாங்கள் மட்டுமே தொழிலாளர்கள், ஏழைகளுக்காக போராடுபவர்கள்; தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள்’ என்று தோழர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் துவங்கி 70 வருடங்களாகிறது.
2005லேயே சி.பி.எம்.மின் கேரள மாநில கிளை ரூ 4000 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாகி விட்டது.
இது கேரளாவிலுள்ள எந்தவொரு தொழில், வர்த்தக நிறுவனத்தை விட மிக அதிகமானதாகும்.
சி.பி.எம். தான் கூறிக் கொள்ளும் கொள்கையிலிருந்து விலகிச் சென்றதோடு மட்டுமில்லாமல் வியாபாரமாகி விட்டது.
தொழிலாளர்கள் மீதான் சுமையாகி விட்டது.
😀 சொத்துக்கள்:
1940களில் இருந்து 1960கள் வரை கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் தங்களது ஆதரவு தளத்தை விஸ்தரிப்பதாக்வே இருந்தது. 1970க்கு பிறகு நோக்கம் பொருள் சேகரிப்பாகி விட்டது.
நமது நாட்டின் பரப்பளவில் 1% மட்டுமே கொண்ட கேரளா 3% மக்கள்தொகையை கொண்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் கேரளமக்கள் பெருமளவில் பணிபுரிவதனாலும், பெரும் பணப்புழக்கத்தினாலும் நிலத்தின் மதிப்பு உயர்ந்தபொழுது, பலரும் நியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.எம். இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்தது.
தற்போது சி.பி.எம். மற்றும் அதன் துணை அமைப்புகள் தான் கேரளாவில் மிக அதிகமான நிலம், கட்டிடம், பண்ணை வீடுகளின் சொந்தக் காரர்கள்.
சி.பி.எம். மற்றும் அதன் துணை அமைப்புகளான சி.ஐ.டியூ, எஸ்.எப்.ஐ. மகளீர் அமைப்புகள் அனைத்துக்குமே தாலுகா முதல் மாநில அளவிலான அலுவலகங்கள் அனைத்தும் சொந்தக் கட்டிடங்களே.
இவற்றில் சுவாராஸ்யமானது பல கோடி ரூபாய் மதிப்பிலான சி.பி.எம்.ன் மாநில அலுவலகக் கட்டிடங்களே.
ஏ.கே.கோபாலன் மையம் 1500 பேர் அமர இருக்கைகள் கொண்டு முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டு திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ளது.
அதன் எதிரில் மாநிலத் தலைவர்களுக்கான ஆடம்பரமான பலமாடிக் கட்டிடம் உள்ளது.
60 ஏக்கர் பரப்பளவில் ஒரு நகரியம் சி.பி.எம். தோழர்களின் பயிற்சிக்காக உள்ளது.
ஈ.எம்.எஸ் அகாடமி அன அழைக்கப்படும் இப்பயிற்சிக் கூடம் தோழர்களின் பகட்டுக்கு எடுத்துக்காட்டு.
பல நூறு கோடி மதிப்பிலான சி.பி.எம்.ன் தொலைக்காட்சி கைரளி உள்ளது.
மற்றொரு ஊடகமான தேசாபிமானி அனைத்து மாவட்டங்களிலும் பதிப்புகளை வெளியிடுகிறது.
கைரளி, தேசாபிமானியின் அனைத்து அலுவலகங்களும் சி.பி.எம்.ன் சொந்த நிலங்களிலேயே செயல்படுகின்றன.
கூட்டுறவுத்துறை மற்றொரு முக்கியமான ஆதிக்கப் பகுதி. அடிப்படை நிலையிலிருந்து மாநில நிலை வரை கூட்டுறவு வங்கிகள் சி.பி.எம்.ன் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
மறைந்த தோழர்களின் பெயரில் பெரிய மருத்துவமனை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளா சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பகுதியாகும். சுற்றுலாத் துறையிலும் சி.பி.எம். காலூன்ற பெரும் நிலங்களை சேகரித்து சுற்றுலா மையங்களை நிறுவியுள்ளது.
இவற்றில் குறிப்பிடத்தக்கவை
கோட்டயத்தில் ’வெகமொன்’,
திரிச்சூரில் ’அதிரப்பள்ளி’,
கண்ணூரில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வாட்டர் தீம் பார்க்.
1) கம்யூனிஸ்ட்கள் ஒரு புறம் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு நிர்வாகத்திடம் எதிர்த் தரப்பினரை காட்டிக் கொடுத்து ஒரு பிரிவினரை அடக்கி வைத்துள்ளனர்.
2) கம்யூனிஸ்கள் தங்கள் மிரட்டல்களினாலும், கொலைவெறித் தாக்குதல்களினாலும் ஒரு பிரிவினரை கட்டுக்குள் வைத்துள்ளனர்.
ஐந்து வருடங்களாக கம்யூனிஸ்ட் பிணய் விஜயன் கும்பல்கள் தங்கம் கடத்தல் மூலமாக பல்லாயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்து மேல் மட்ட தலைவர்களின் பிள்ளைகள் ஒவ்வெருவருக்கும் கம்பனிகள் தொடங்கி கொடுத்துள்ளனர். ஆனால் கேரளாவின் இளைஞர்கள் அரபுநாடுகளில் ஒட்டகம் மேய்க்க்கவும்,பெண்கள்செக்ஸ் தொழிலுக்கும் செல்கின்றனர். கிருஷ்டவ இஷ்லாமியர் பல நாடுகளிலிருந்து கடத்தல் தொழில் செய்கின்றனர்.
எதிர்த் தரப்பினர் மீது அவதூறு செய்வதும், எதிர்த் தரப்பினரை படுகொலை செய்தும் தாங்கள் தான் தொழிலாளர்களின் ஒரே பாதுகாவலர் என மற்றொரு பிரிவினரை நம்ப வைக்கின்றனர்.
இந்த நம்பிகைகள் நொறுங்க ஆரம்பித்துள்ளன.
வர்க்கப் போராட்டம் திசை மாறி தற்போது கம்யூனிஸ்ட் சி.பி.எம், சி.ஐ.டி.யூ. தலைமை மீது, உரிமைகளை பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் தொடுக்கும் யுத்தமாக மாறிவிட்டது.
தொழிலாளர் நண்பனாக வேஷமிட்டு ‘பசுத்தோல் போர்த்திய இந்த ஓநாய்களை’ வேரும், வேரடி மண்ணுமாக அகற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...