Thursday, September 30, 2021

சரி சுப வீரபாண்டியன் தான் ஒரு இந்து என்று சொல்லி உள்ளாரா...???

 கலைஞர் டி.வி.யின் 'ஒன்றே சொல்,நன்றே சொல்' பகுதியில் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஹிந்து மதத்தைச் சாராத ஒருவரை பிடித்து ராம் ராம் என்று கூற வற்புறுத்தி, அவரை, தாக்கியிருப்பதை கண்டித்து பேசும் பொழுது, "ராம் ராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறுவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த நம்பிக்கை இல்லாத ஒருவரை வற்புறுத்துவது அராஜகம். மற்றவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும்" என்றெல்லாம் பேசினார். ரொம்ப சரி. மற்றவர்கள் கடவுளாக வணங்கும் பிள்ளையார் விக்கிரகங்களை போட்டு உடைப்பதும், அவர்கள் வணங்கும் ராமனையும்,கிருஷ்ணனையும் அவதூறாக பேசுவதும், அந்த படங்களுக்கு செருப்பு மாலை போடுவதும் கூட அராஜகம்தானே மிஸ்டர் சுப.வீ.? மத நம்பிக்கையோடு ஒரு சாரார் அனிந்திருக்கும் பூனூலை அறுப்பதும் எந்த வகை?

எனக்கு ஒரு சந்தேகம் ரமதான் மாதத்தில் நீங்கள் அரபு நாடுகளுக்குச் சென்றால் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ காலை முதல் மாலை வரை நீங்கள் பொது இடங்களில் எதுவும் சாப்பிடவோ, ஏன் தண்ணீர் கூட அருந்த முடியாது. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது, உடனடியாக கைது செய்யப்படுவீர்கள். ஏன் சவுதியில் பகலில் சமைக்கும் வாசனை கூட வரக்கூடாது. அங்கு போய் இது அராஜகம் என்று சொல்ல முடியமா உங்களால்?
அபுதாபியில் நடைபெறும் ஐ.பி.எல். மாட்சின் டெலிகாஸ்ட்டிற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். சொல்லப்பட்டிருக்கும் காரணம், ஸ்டேடியத்தில் பெண்கள் அமர்ந்து மாட்ச் பார்க்கின்றனராம். இதையெல்லாம் விமர்சிப்பாரா திரு.சுப.வீ.? சீ சீ அதையெல்லாம் விமர்சிக்க அவருக்கு என்ன பைத்தியமா? இந்துக்கள்தான் அப்பாவிகள்,என்ன சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பார்கள், அதனால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...