Monday, September 27, 2021

எனக்கு மட்டும் ஏன் இது நடக்குது?

 இந்த கேள்வியை ஒவ்வொருவரும் நமக்கு நாமே அல்லது சுற்றி இருப்பவர்களிடமோ கேட்டிருப்போம். ஒரு சிலர் அடிக்கடி கேட்பாங்க, மற்றவர்கள் எப்போதாவது கேட்பார்கள், அந்த இடைவெளி வித்தியாசப்படும். ஆனால் அதே நாம் எப்போதும் இதே கேள்வியை கேட்டுக்கொண்டா உள்ளோம்? அப்படி கேட்கவில்லை என்றால் நமக்கு நல்லது நடக்கிறது அல்லது குறைந்த பட்சம் கெடுதல் நடக்கவில்லை என்றுதானே அர்த்தம். அப்படி நடக்கும்போது எனக்கு மட்டும் எதற்கு இறைவா இத்தனை கொடுக்கிறாய், எல்லார்க்கும் கொடேன் என்று கேட்கிறோமா? இல்லையே!!

ஆனால் அப்படி கேட்கும்போதெல்லாம் அந்த இறையை அறிய நமக்கு ஒரு வாய்ப்பை நமக்கு கொடுக்கிறான். அதை புரியாமல் நாம் அதையும் மறந்து ஆசைக்கும், பாசத்துக்கும் அடிமையாகிறோம், அடிபணிகிறோம்.
சரி, அந்த இறைவந்தான் யார்? எங்கிருக்கிறான்? அவனை எப்படி அடைவது?
இறைவன் எங்கும் இருக்கிறான், நிறைந்திருக்கிறான், அவன் உன்னுள்ளும் இருக்கிறான்.. நீ அவன் பாதங்களில்தான் இருக்கிறாய்! அவனிடம் இருந்துதான் நீ இங்கு வந்தாய், அவனோடுதான் இருக்கிறாய், இறந்தபின் அவனோடுதான் கலக்கிறாய்!
அப்போ சரி, எப்போதும் அவனோடு இருக்கும் நான் எதற்காக அவனை தேடவேண்டும்?
தேட வேண்டும் என்ற வார்த்தையை விட உணர வேண்டும் என்பதே உண்மை. அது மற்ற பிறவிகளில் முடியாது..
எப்படி உணர்வது?
மீனுக்கு தான் தண்ணியில் இருக்கிறோம் என்பது அதற்கு தெரியாது, அதாவது தண்ணீரில் இருந்து வெளியே போட்டு துடிக்கும்வரை அதை சுற்றி தண்ணீர் இருப்பது தெரியாது! அதுபோலத்தான் நாமும் உயிரோடு இருக்கும்வரை அதை உணர்வதில்லை. ஆனால் இறந்த பின் அறிவோம், நம்மை சுற்றியிருந்த இறையை அறியவில்லையே என்று. ஏனெனில் மனித பிறவியில் மட்டுமே அந்த இறையை உயிரோடு இருக்கும்போதே உணர முடியும். அப்படிப்பட்ட "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது.." என்று ஔவை பாட்டி சொன்னதை கோடியில் ஒருவர் கூட அறிவதில்லை.
அறியத்தான் விரும்புகிறோம் எப்படி என்று தெரியவில்லையே என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும்.
இறையை அறிய நான்கு நிலைகள்.
1) சரியை
2) கிரியை
3) யோகம்
4) ஞானம்
இந்த நான்கும் படி நிலைகள். ஒன்றபின் ஒன்றாக நிகழ்வது என்றாலும் நான்காவது நிலையை நேரடியாக அடையக்கூட முடியும் ஆனால் அதீத பக்தி வேண்டும். கோடியில் ஒருவர் கூட முதல் நிலையை கடப்பத்தில்லை என்பதே கலிகாலம். ஒவ்வொரு நிலையும் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்
நான்கு நிலைகளில் மிக சாதாரண நிலை. இந்த நிலையின் முக்கிய ஆயுதம் அன்பு. எங்கும் நீக்கமர இருக்கும் அன்பின் மூலம் இறைய உணரலாம். ஆனால் நாம் அன்பு என்று நினைப்பது அன்பல்ல, பிரதி பலன் எதிர்பாராமல் செய்வதே அன்பு. நாம் செய்வதெல்லாம் பாசம், ஆம், பெற்றவர்களிடம் அன்பு செய்கிறோம் குழந்தையாக சார்ந்திருக்கும்போது, அடுத்து வேறுபடுகிறோம், பின்னர் அதே பெற்றோர் சுமையாக மாறும்போது வெறுக்கிறோம். பெற்றவர்கள் மட்டுமா, பிள்ளைகள் கூட நம் சொல்பேச்சு கேட்கும் வரை அன்போடு உயிரை கொடுத்து வளர்க்கிறோம், அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்ற சுய நலத்தோடு! அது தவறும்போது வெறுக்கிறோம். இதுவெல்லாம் அன்பல்ல, பாசம்.
அப்படி அல்லாமல் பிரதி பலன் இல்லாமல் நாம் செய்யும் அன்பு, உதவி எல்லாமே இறையை காட்டும் வழி. இந்த அன்பு என்பது வடிவம் எதுவும் இல்லாமல் வெளியே தேடி உள்ளே மகிழ்வது. அதனால்தான் உலகில் பணக்காரர்கள் பலர், உச்சத்தை தொட்டபோது வெறுமையை உணர்ந்து, மற்றவர்களுக்கு உதவி மகிழ்கிறார்கள். இதை நம் அளவில் நாமும் செய்து இறை என்னும் மகிழ்வை அடையலாம்.
இது இரண்டாம் நிலை. கடவுளை கல், மண், மரம், செடி, கொடி, சிலை என்ற வடிவில் இறைவனை பூஜித்து, மந்திரங்கள் சொல்லி, அதில் ஐக்கியம் ஆவது. இதை நாம் அறிவோம். நம் கவனத்தை வெளியில் இருக்கும் ஒரு பொருளின்மீது செலுத்தி, அதை நிலைக்க செய்து மனதில் ஒரு வெற்றிடம் எனும் எதைப்பற்றியும் சிந்திக்காத ஒரு நிலையை அடைவதன் மூலம் இறையை அடைவது. இதை மந்திரங்கள், பூஜைகள், ஜெபம் போன்ற பல வழிகளில் அடையலாம்.
மேற்சொன்ன இரண்டுமே இறையை வெளியே தேடுவது. இங்குள்ள மதங்கள் பலவும் இதைத்தான் போதிக்கிறது. ஆனால் அந்த வெளியே இருக்கும் இறையை திருப்தி செய்ய உயிர்களை, ஏன் மற்றவர்களை கொலை கூட செய்யும் நம்பிக்கைக்கும், அதை பின்பற்றாவதர்களை தண்டிக்கும் நிலைக்கு கூட ஆளானோம்.
இது மேற்சொன்ன இரண்டிலுமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது கடவுளை வெளியே தேடாமல் நம்முள்ளேயே தேடுவது. கடவுள் எங்கும் நீக்கமற இருக்கிறான் எனும்போது நம்முள்ளும் இருக்கிறான். அதை ஆன்மா என்று நம்முள் இருக்கும் சக்தியை அறிதல் மூலம் இறையை அறிதலாகும். நம்முள் எப்படி இருக்கிறார்? ஒளி வடிவத்திலா? இல்லை அவர் வெற்றிடமாக இருக்கிறார். நம் உடம்பில் இருக்கிற வெற்றிடங்களை சக்கரம் என்றும் சொல்கிறார்கள். அந்த வெற்றிடத்தின் மூலம் நம் ஆன்மாவை அறிய முடியும். அது மட்டுமல்ல நம் உடம்பில் உள்ள கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றும் அணுக்களால் ஆனது, அந்த அணுக்கள் ஒவ்வொன்றிலும் இருப்பது பெரும் வெற்றிடம், அந்த வெற்றிடமே அண்டம் முழுவதும் வியாபித்துள்ளது.
இது பற்றி மேலும் அறிய எனது சுய புரிதல் என்ற பதிவை பார்க்கவும்.
இதுவும் மூன்றாவது நிலையான ஆன்மாவை உடம்பின் உள்ளே அறிந்தபின், அதாவது உள்ளிருக்கும் வெற்றிடத்தை அறிந்தபின் அந்த ஆன்மா மூலம் வெளியே உள்ள அனைத்தையும் அறிவது என்ற உயர்ந்த நிலை. அதாவது வெளியில் நம்மை சுற்று, பூமியை சுற்றி, அண்டத்தை சுற்றி எங்கும் இருக்கும் அந்த வெற்றிடம் என்ற வெட்டவெளியை அறியலே ஞானம் என்பதாகிறது. இந்த ஞான சக்தி மூலமே பல ஞானிகள், அண்டம் முழுவதும் உள்ள வெற்றிடமும் அதில் மிதக்கும் பிண்டங்களை பற்றி அறிதலாகும். அது எல்லையில்லாதது, அதை, அதன் எல்லையை, ஞானிகள் கூட அறிந்ததில்லை. அவ்வளவு ஏன், நம்மை படைக்கும் பிரம்மன் கூட அறிந்ததில்லை. அதை முற்றும் அறிந்தவனே சிவம் என்கிறோம்.
எல்லோர்க்கும் எல்லா வழிகளும் எளிதல் சாத்தியமல்ல. அதற்கும் இறையருளும் இடைவிடா முயற்சியும் தேவை.. அதற்கு எல்லா உயிர்கள், உயறற்ற பொருள் என்று எல்லாவற்றிலும் வெட்டவளி என்ற வெற்றிடம் இருப்பதால் அதையும் இறையாக நினைத்து அன்பு செலுத்துவதன் மூலம் எல்லாமும் நாமாகி இறையை அடையலாம்
இப்போது நம்மால் முடிந்த எல்லோரிடமும் அன்பு செலுத்த முயல்வோம். அப்படி அன்பு செலுத்தும்போது உங்கள் உள்ளிருக்கும் வெட்டவெளியின் சந்தோசத்தால் நோய் நொடியின்றி சந்தோஷம், துக்கம் இரண்டும் இல்லாத பற்றற்ற வாழ்வை நிலைய அடைய முடியும்! அந்த நிலை இறையை நோக்கி இட்டுச்செல்லும்!
ஓம் சிவாய நமக!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...