Wednesday, September 29, 2021

" சனி பகவான் ".

 இப்படியாக மக்கள் மனதில் சனி பகவான் மீதான நல்ல எண்ணம் அழியத் துவங்க, அதனை உணர்ந்து கொண்ட சனி பகவான் மனம் வருந்தி திருகொள்ளிக்காட்டுக்கு வந்து தன்னை தண்டனை தரும் தொழிலில் இருந்து விலக்கி விடுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்து தவமிருந்தார். அவருடைய பூஜையினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமானும் அவருக்கு நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்து அவர் நடு நிலைமையோடு செய்து வரும் தொழிலை வெகுவாக புகழ்ந்து அவரை தேற்றினார். அது மட்டும் அல்லாமல் அங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தையும், வளத்தையும் தரும் அனுகிரக மூர்த்தியாக, பொங்கு சனியாக இரண்டாவது அவதாரம் எடுத்து அந்த தலத்திலேயே அமர்ந்து கொண்டு அருள் புரியுமாறும் கூறினார். இதனால் தேவலோகத்தில் செல்வத்தை தரும் வகையில் தேவி மகாலட்சுமி எத்தனை உயர்வான இடத்தில் அமர்ந்துள்ளாரோ அதற்கு இணையாக பூமியில் செல்வத்தை தரும் வகையில் ஏர்கலப்பை மற்றும் காகத்தின் சின்னம் பொரித்த கொடியை கையில் ஏந்திய திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானாக இரண்டாவது அவதாரம் எடுத்து அமர்ந்தார். சனி பகவானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த ஆலயத்திலேயே சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டார். சனி பகவானுக்கு சிவபெருமான் நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்ததினால் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் இளம் சிவப்பு நிறத்தில் காட்சி தருகின்றது. பொங்கு சனி பகவானது செயல்களுக்கு துணை புரிய அவருடைய குருவான பைரவப் பெருமானும் பொங்கு சனி பகவானின் சன்னதியின் எதிர் சன்னதியில் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் என்பது இந்த ஆலயத்தின் விசேஷமான காட்சி ஆகும்.

May be an image of fruit and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...