Thursday, September 23, 2021

*பெருமாள் கோயிலில் நவகிரக சன்னதி அமைக்கப் படுவதில்லையே ஏன் ?*

 பெருமாள் அல்லது திருமால் மூன்றடிகளில் உலகை அளந்தவர் . அதனால் அவருக்குள்ளேயே உலகம் மட்டும் அல்லாமல் அண்ட சராச்சரங்களும் அனைத்து கிரகங்களும் , உலகங்களும் அடக்கம் . பெருமாளை கும்பிட்டாலேயே நவக்கிரகங்களையும் சேர்த்துக் கும்பிட்ட பலன் கிடைக்கும் என்பது வீர வைணவர்களின் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை . அப்படி இருக்க தனியாக ஏன் ஒரு நவகிரக சந்நிதி வைத்து பராமரிக்க வேண்டும் . அது தேவை அற்றது அல்லவா ? அதனால் தான் திருமால் கோயிலுக்குள் நவக்கிரகங்கள் இல்லை . மேலும் , திருமால் கோயிலில் திருமால் தான் சுப்பீரியர் பவர் . வைணவர்களை பொறுத்தவரையில் அவரே எல்லாம் . தவிர , ராமாவதாரம் ( சூரியன் ) , கிருஷ்ணா வதாரம் ( சந்திரன் ) , நரசிம்மவதாரம் ( செவ்வாய் ) , கல்கியவதாரம் ( புதன் ) , வாமனவதாரம் ( குரு ) , பரசுராமாவதாரம் ( சுக்ரன் ) , கூர்மவதாரம் ( சனி ) , மச்சாவதாரம் ( கேது ) வராகவதாரம் ( ராகு ) , பலராமவதாரம் ( குளிகன் ) என்று பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன . அவை ஸ்ரீவைகுண்டம் ( சூரிய ஸ்தலம் ) , வரகுணமங்கை -நத்தம் ( சந்திரன் ஸ்தலம் ) , திருக்கோளூர் ( செவ்வாய் ஸ்தலம் ) , திருப்புளியங்குடி ( புதன் ஸ்தலம் ) , ஆழ்வார்திருநகரி ( குரு ஸ்தலம் ) , தென்திருப்பேரை ( சுக்ரன் ஸ்தலம் ) , பெருங்குளம் , ( சனி ஸ்தலம் ) , இரட்டைத் திருப்பதி- ( தேவர்பிரான் ) ( ராகு ஸ்தலம் ) இரட்டைத் திருப்பதி ( அரவிந்த லோசனர் ) - கேது ஸ்தலமாக கருதப்படுகிறது . இப்படியாக அனைத்துமாகி நிற்பவனே நாராயணன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...