Friday, September 24, 2021

 சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து திமுகவினர் விண்ணப்பம் என்ற பெயரில் திமுக லெட்டர் பேடில் விண்ணப்பப் படிவம் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.....

தமிழகத்தில் ஒரு லட்சம் வீடு இல்லாத ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் தங்களுக்கு வீடு வழங்கக்கோரி விண்ணப்ப படிவம் கொடுத்து வருகிறார்கள்....
இதற்கிடையே தலைமைச் செயலகத்தின் எதிர்புறத்தில் உள்ள இப்பகுதியில் ஏராளமான திமுகவினர், மு க ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின், ஆகியோரின் படம் அச்சிடப்பட்ட திமுக லெட்டர் பேடில், விண்ணப்ப படிவம் தயாரித்து ஒரு விண்ணப்ப படிவம் இருபது ரூபாயும் அதை பூர்த்தி செய்வதற்கு பத்து ரூபாய் என 30 ரூபாயை பொதுமக்களிடம் வாங்கி வருகிறார்கள்.
இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் திமுகவினர் விற்பனை செய்யும் விண்ணப்பப்படிவத்தை பணம் கொடுத்து வாங்கி சென்று பூர்த்திசெய்து தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் தங்களது மனுக்களைப் போட்டு வருகிறார்கள்...
ஆனால் தலைமைச் செயலகத்தில் திமுக லெட்டர் பேடில் விண்ணப்பப்படிவம் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தியும் ஏராளமான திமுகவினர் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்........
May be an image of 2 people and text that says 'திராவிட முன்னேற்ற கழகம் விடுநர் வீடு மனை வழங்கக்கோரி விண்ணப்பம் தேதி : இடம்: கைபேசி எண் பெறுநர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தலைமைச் செயலகம், தனிப்பிரிவு, சென்னை 600 009. பொருள் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் எனக்கு வீடு வேண்டி மனு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம், நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகின்றேன். எங்கள் குடும்பத்தில் ........நபர் ................... இனம் ..............ிபிுி, நான் கூலி வேலை செய்து நான் ......... வருடமாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றேன். என்னால் வீட்டு வாடகை மற்றும் குடும்பம் நடத்த முடியவில்லை. கருணை நாயகனே என் மனுவை பரிசீலனை செய்து மற்றும் என் மீது கருணை வைத்து ஒரு வீடு வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன், மிக பணிவுட னும் கேட்டுக் இணைப்பு நன்றி, 000000 இப்படிக்கு,'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...