Wednesday, September 22, 2021

*சொந்த வீடு வாங்க ஆசையா*?

 சொந்த வீடு வாங்க வேண்டுமா*?

*நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்*!
*எலி வலையாக இருந்தாலும் தனி வலை வேண்டும் என்பது பழமொழி*!.
*இந்த பழமொழிக்கு ஏற்ப மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே தனக்கென சொந்த வீடு வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்கின்றது*
*சூழ்நிலை காரணமாக நிதி நிலைமை காரணமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம்*.
*பரவாயில்லை!சீக்கிரமே சொந்த வீடு வாங்கும் கனவு நனவாக ஆன்மீக ரீதியான ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்*
*நீங்கள் வாடகை கொடுப்பதற்கு முன்பு வாடகைக்கு எடுத்து வைக்கும் பணத்தை இந்த டப்பாவில் வைத்து எடுத்துக் கொடுங்கள் போதும் சீக்கிரமே சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைத்துவிடும்*
*அது எந்த டப்பா என்று தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா*?
*இப்போதே தெரிந்து கொள்ளலாம்*!
*அது உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் துவரம்பருப்பு டப்பாதான்*!
*உங்கள் வீட்டு வாடகை எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரி அந்த வாடகை தொகையை எடுத்து ஒரு கவர் உள்ளே வைத்து ரப்பர் பேண்ட் போட்டு் மடித்து சுருட்டி அப்படியே திங்கட்கிழமை காலை அந்த காசினை துவரம்பருப்பு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள்*
*மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு முன்பாக துவரம்பருப்பு டப்பாவில் கவரில் மடித்து சுருட்டி வைத்து இருக்கும் வாடகையை எடுத்துக் கொண்டு போய்
வீட்டு உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும்.
மாதம் மாதம் இதை செய்யுங்கள் இப்படி செய்தால் வீட்டு உரிமையாளருக்கு எந்த கஷ்டமும் வராது .
*வீட்டில் வாடகை இருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டாகி
சொந்த வீடு வாங்கும் அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கைத்தரம் நிச்சயமாக மாறும்*
*இப்படி செவ்வாய்க் கிழமை வாடகை கொண்டு போய்க் கொடுக்கும் போது முருகப் பெருமானிடம் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள்*
*எங்களுக்கு இப்படி மாதம் மாதம் வாடகை கொடுக்கும் நிலை மாறவேண்டும்*
*எங்களுக்கும் சொந்தமாக வீடு வாங்க கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பின்பு வாடகை பணத்தை கொண்டுபோய் கொடுக்க வேண்டும்*
*சிலபேருக்கு வீட்டு வாடகையை கொடுக்க
முடியாத சூழ்நிலை இருக்கும்*
*இப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் அடுத்து வரக்கூடிய மாதங்களில் வாடகை தொகையை சிரமமில்லாமல் கொடுக்கும் அளவிற்கு அவர்களுடைய நிதிநிலைமை உயரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று*
*சரி!இந்த துவரம் பருப்புக்கும், வீட்டு வாடகைக்கும் என்ன சம்பந்தம்*
*பூமிக்கு சொந்தக்காரன் பூமிகாரகன் செவ்வாய் பகவான்*
*செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரம்பருப்பு*
*இந்த துவரம்பருப்பை உங்களால் முடிந்த அளவிற்கு ஆறு நாள் ஆறு மாதம் ஆறு வாரம் எப்படி இருந்தாலும் சரி
6 என்ற கணக்கை வைத்துக் கொண்டு இயலாதவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்*
*இப்படி செய்தாலும் சொந்த வீடு வாங்க கூடிய யோகம் வரும்*
*வாடகை செலுத்துவதற்கு கூட பணக்கஷ்டம் இருந்தால் அந்த கஷ்டம் படிப்படியாக சரியாகிவிடும்*
.
*நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்*!
*துவரம்பருப்பில் அடங்கியிருக்கும் மகத்துவம் உங்களுக்கே புரியும்*!
*சொந்த வீடு வாங்கும் உங்களுடைய கனவு நனவாக வேண்டும் என்று அந்த முருகப் பெருமானையும் செவ்வாய் பகவானையும் மனதார வேண்டிக் கொள்கிறேன்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...